தேசியக்கொடி ஏற்றுகிறார் பிரதமர் மோடி..!! மலர் மழையை பொழிய காத்திருக்கும் 2 ஹெலிகாப்டர்கள்..!! உச்சகட்ட பரபரப்பில் டெல்லி..!!

Modi 2025

நாடு முழுவதும் இன்று 79-வது சுதந்திர தினம் வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது. தேசிய தலைநகரான டெல்லி செங்கோட்டையில் இன்று முக்கிய நிகழ்வுகள் நடைபெறவுள்ளன. மேலும் 28 மாநிலங்​கள், 8 யூனியன் பிரதேச தலைநகரங்​கள், மாவட்ட தலைநகரங்​களில் சிறப்பு ஏற்​பாடு​கள் செய்யப்பட்டுள்ளது.


செங்​கோட்​டை​யில் இன்று காலை 7.30 மணிக்கு பிரதமர் மோடி தேசியக்கொடி ஏற்றி வைத்து நாட்டு மக்களுக்கு உரையாற்ற உள்ளார். இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன. மேலும், பிரதமர் மோடி தேசியக் கொடி ஏற்றும் நிகழ்வின்போது, 2 ஹெலிகாப்டர்கள் மூலம் மலர்தூவ ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

செங்​கோட்​டைக்கு வரும் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட உள்ளது. மத்​திய பாது​காப்​புத் துறை அமைச்​சர் ராஜ்​நாத் சிங், இணை அமைச்​சர் சஞ்​சய் சேத், ராணுவம், கடற்​படை, விமானப் படை மற்​றும் காவல்துறையை சேர்ந்த வீரர்​களின் சிறப்பு அணிவகுப்பு மரி​யாதையும் நடைபெறவுள்ளது.

செங்கோட்டையில் நடைபெறும் சுதந்திர தின விழாவை முன்னிட்டு, அங்கு 3 அடுக்கு பாதுகாப்புகள் போடப்பட்டுள்ளது. சுமார் 11,000-க்​கும் மேற்​பட்ட பாது​காப்பு படை வீரர்​கள் காவல் மற்றும் ரோந்துப் பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். செங்​கோட்டையை சுற்றியும் 3,000 போலீ​சார் போக்​கு​வரத்தை ஒழுங்​கு படுத்​தும் பணி​யில் ஈடுபட்டுள்ளனர்.

அதேபோல், டெல்லி வான்பகுதியில் ட்ரோன்கள், பாராகிளைடர்கள், பலூன்கள் பறக்க ஏற்கனவே தடை விதிக்கப்பட்டுள்ளது. அதிநவீன சிசிடிவி கேம​ராக்​கள் உள்​ளிட்​டவை செங்​கோட்டை வளாகத்​தில் பொருத்​தப்​பட்டு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.

Read More : கபாலி, லியோ படத்தின் சாதனையை முறியடித்த கூலி..!! வட அமெரிக்காவில் புதிய சரித்திரம் எழுதிய ரஜினி..!!

CHELLA

Next Post

நேரு சகாப்தம் முதல் உலகின் 4வது பொருளாதார நாடாக மாறியது வரை!. இந்தியாவின் வளர்ச்சிப் பயணம் எப்படி இருந்தது?.

Fri Aug 15 , 2025
ஜவஹர்லால் நேருவின் ஆட்சிக் காலத்தில், நாடு சோசலிசப் பாதையில் முன்னேறியது. அப்போது எடுக்கப்பட்ட முடிவுகள் எதிர்கால இந்தியாவின் அடித்தளத்தை அமைத்தன. நாடு 1947 இல் சுதந்திரம் பெற்றது, அதன் பிறகு வளர்ச்சியின் பல பரிமாணங்கள் காணப்பட்டன. நேரு சகாப்தம் முதல் இந்திரா மற்றும் ராஜீவ் காந்தியின் ஆட்சி வரை, பின்னர் பி.வி. நரசிம்ம ராவ் காலத்தில் தாராளமயமாக்கல் மற்றும் இன்றைய “புதிய இந்தியா” பற்றிய தொலைநோக்கு, ஒவ்வொரு சகாப்தமும் அதன் […]
Nehru to 4th largest economy 11zon

You May Like