கோடை விடுமுறையில் மாணவியை பள்ளிக்கு அழைத்த முதல்வர்..!! கூட்டு பலாத்காரம் செய்து கொடூரமாக கொன்ற ஆசிரியர்கள்..!!

பள்ளி மாணவியை கூட்டு பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் ஆசிரியர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.


உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் சன்பீம் என்ற தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. தற்போது பள்ளிக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை பள்ளியின் முதல்வர், 10ஆம் வகுப்பு மாணவி ஒருவரின் வீட்டிற்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது மாணவியை பள்ளிக்கு வருமாறு அழைத்துள்ளார். முதல்வர் அழைத்ததால் காலை 9 மணி அளவில் மாணவி பள்ளிக்கு சென்றுள்ளார். ஆனால் அதிலிருந்து ஒரு மணிநேரம் கழித்து மாணவி மாடியில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்ததாக பெற்றோருக்கு தகவல் வந்துள்ளது.

இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர், உடனே பள்ளிக்கு விரைந்து தனது மகளின் உடலை பார்த்து கதறி அழுதனர். அதேநேரம் மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்களுக்கு சந்தேகம் எழுந்தது. பின்னர் பள்ளி நிர்வாகத்தினரிடம் கேட்டபோது அவர்கள் முறையான பதில் அளிக்காமல் சமாளித்து அனுப்பும் முயற்சியில் ஈடுபட்டனர். மாணவி மாடியில் ஊஞ்சல் ஆடும்போது தவறி விழுந்ததாக பள்ளி தரப்பினர் கூறியுள்ளனர். இதனை ஏற்க மறுத்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் இதுகுறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.

அவர்கள் நடத்திய விசாரணையில், மாணவி மாடியில் இருந்து விழுவது சிசிடிவி காட்சிகள் தெளிவாக பதிவாகியுள்ளது தெரியவந்தது. எனவே, மாணவியை யாரோ மேலே இருந்து தூக்கி வீசியிருக்கிறார்கள் என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர். ஆனால், விசாரணைக்கு முன்பே மாணவி விழுந்த இடத்தில் இருந்து ரத்த கறை போன்ற தடயங்கள் அழிக்கப்பட்டுள்ளன. இதுவும் சந்தேகத்தை வலுப்படுத்தியது. அதேநேரம் மாணவியின் பெற்றோர் மற்றொரு குற்றச்சாட்டை முன்வைத்தனர்.

மாணவியை பள்ளியின் விளையாட்டு ஆசிரியர் அபிஷேக் மற்றும் மேலாளர் பிரிஜேஷ் யாதவ் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து அதை மறைக்க மாடியில் இருந்து தூக்கி வீசியதாக தெரிவித்தனர். இந்த குற்றத்திற்கு பள்ளி முதல்வர் ராஷ்மி பாடியாவும் உடந்தை என கூறினர். அதன் பேரில், அயோத்தி காவல்துறை பள்ளி முதல்வர், மேலாளர், விளையாட்டு ஆசிரியர் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். மாணவியின் உடற்கூறு ஆய்வு முடிவுகளின் அடிப்படையில் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதுபன் சிங் தெரிவித்துள்ளார்.

CHELLA

Next Post

ஷாக்கிங்..!! கோயிலுக்குள் நிர்வாணமாக சுற்றித்திரிந்த இளம்பெண்..!! அதிர்ந்துபோன பக்தர்கள்..!! நடந்தது என்ன..?

Mon May 29 , 2023
இந்தோனேசியாவின் பாலி நகரில் உள்ள பிரபலமான கோயில் சுற்றுலாப் பயணிகளின் முக்கிய தலமாக உள்ளது. தினசரி இங்கு ஏராளமான வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வந்து செல்வது வழக்கம் என்று கூறப்படுகிறது. இந்நிலையில், அந்த கோயிலுக்குள் ஜெர்மனியைச் சேர்ந்த இளம்பெண் சுற்றுலாப் பயணி ஒருவர் வந்துள்ளார். அவர் அனைவரும்போல கோயிலில் சுற்றியுள்ளார். அப்போது திடீரென கோயிலுக்குள் தனது ஆடைகளைக் கழற்றி விட்டு வினோதமாக நடந்து கொண்டார். அதோடு நிர்வாணமாக கோயிலை சுற்றி […]
ஷாக்கிங்..!! கோயிலுக்குள் நிர்வாணமாக சுற்றித்திரிந்த இளம்பெண்..!! அதிர்ந்துபோன பக்தர்கள்..!! நடந்தது என்ன..?

You May Like