சிறை அதிகாரிகளுக்கு பயந்து செல்போனை விழுங்கிய கைதி!… அறுவை சிகிச்சையின்றி அகற்றம்!… பீகார் சிறையில் பரபரப்பு!

பீகாரில் சிறை அதிகாரிகளுக்கு பயந்து கைதி ஒருவர் விழுங்கிய செல்போனை எந்தவித அறுவை சிகிச்சையின்றி வயிற்றில் இருந்து பாட்னா மருத்துவர்கள் வெற்றிகரமாக அகற்றிய சம்பவம் பரபரப்பையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது.


பிகார் மாநிலம் கோபால்கஞ்ச் மாவட்ட சிறையில், தடை செய்யப்பட்ட நிலையிலும் பொருட்கள் மற்றும் செல்போன் உள்ளிட்டவைகள் கிடைப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துவருகின்றன. அதனடிப்படையில் அடிக்கடி சிறையில் அதிகாரிகள் சோதனை செய்துவருகின்றனர். இந்தநிலையில், கடந்த சனிக்கிழமை சோதனை செய்தபோது, அதிகாரிகளுக்கு பயந்து குவாஷிகர் அலி என்ற கைதி தான் மறைத்துவைத்திருந்த செல்போனை விழுங்கியதாக தெரிகிறது. இதையடுத்து, கைதிக்கு திடீரென கடும் வலிற்று வலி ஏற்பட்டது. இதனையடுத்து சிறை மருத்துவமனையில் அவருக்கு மருத்துவர்கள் பரிசோதனை மேற்கொண்டனர்.

உடனடியாக கோபால்கஞ்ச் மாவட்ட மருத்துவமனைக்கு அவரை கொண்டு செல்லுமாறு சிறை அதிகாரிகளை கேட்டுக் கொண்டதையடுத்து, அங்கு அவருக்கு வயிற்றில் எக்ஸ்ரே எடுக்கப்பட்டது. அதில் செல்போன் இருப்பது தெரிய வந்தது. பின்னர் மேல்சிகிச்சைக்காக பாட்னா மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட கைதியின் வயிற்றில் இருந்து எண்டோஸ்கோபிக் உதவியுடன் எவ்வித அறுவை சிகிச்சையின்றி செல்போனை வெற்றிகரமாக மருத்துவர்கள் அகற்றினர். மேலும், எந்த அறுவை சிகிச்சையும் இன்றி இந்த அளவிலான பொருள் மீட்டெடுக்கப்பட்டது இதுவே முதல் முறை என்று மருத்துவர்கள் கூறினர்.

KOKILA

Next Post

எங்கள் நாட்டையும் பிரதமர் மோடியே ஆட்சி செய்யவேண்டும்!... வைரலாகும் பாகிஸ்தான் நபரின் பேச்சு!

Sat Feb 25 , 2023
எங்கள் நாட்டையும் இந்திய பிரதமர் நரேந்திர மோடியே ஆட்சி செய்யவேண்டும் என்று பாகிஸ்தானை சேர்ந்த நபர் ஒருவர் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவிவருகிறது. இலங்கையைத் தொடர்ந்து கடுமையான பொருளாதார நெருக்கடியில் பாகிஸ்தான் சிக்கித் தவிக்கிறது. விலைவாசி உயர்வு, நிலையற்ற பொருளாதாரம், பணவீக்கம், உறுதியற்ற அரசியல் தலைமை, பெட்ரோலிய பொருட்கள் இறக்குமதி செலவுகள், குறைந்துவரும் அந்நிய செலாவணி கையிருப்பு உள்ளிட்ட இன்னல்களுக்கு மத்தியில் பாகிஸ்தான் சிக்கித் தவிக்கின்றது. மேலும், […]
pakistani speech

You May Like