தனியார் கல்லூரி சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து விபத்து..!! பலி எண்ணிக்கை 5ஆக உயர்வு..!! கோவையில் அதிர்ச்சி சம்பவம்..!!

தனியார் கல்லூரி சுற்றுச்சுவர் இடிந்து விழுந்த விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 5ஆக உயர்ந்துள்ளது.


கோவை மாவட்டம் குனியமுத்தூரை அடுத்துள்ள சுகுணாபுரம் பகுதியில் ஸ்ரீ கிருஷ்ணா கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரி வளாகத்தின் விடுதி அருகே காம்பவுண்ட் சுவர் ஒன்று உள்ளது. கருங்கல்லால் கட்டப்பட்ட இந்த சுவர் 30 அடி நீளமும், 5 அடி உயரமும் கொண்டது. இதன் அருகில் புதிய காம்பவுண்ட் சுவர் எழுப்ப திட்டமிடப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வந்தது. இதையடுத்து, புதிய காம்பவுண்ட் சுவர் எழுப்ப பழைய கருங்கல் காம்பவுண்ட் சுவர் அருகில் குழி தோண்டப்பட்டுள்ளது.

இந்த பணியில் ஆந்திராவை சேர்ந்த 3 தொழிலாளர்களும், மேற்கு வங்கத்தை சேர்ந்த 2 தொழிலாளிகள் என மொத்தம் 5 பேர் ஈடுபட்டு வந்தனர். அப்போது, எதிர்பாராத விதமாக சுற்றுச்சுவர் கட்டுமான பணியின் போது சுவர் இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். பரூன் கோஸ் என்பவர் படுகாயமடைந்த நிலையில், கோவை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். தற்போது அவரும் உயிரிழந்ததை அடுத்து பலி எண்ணிக்கை 5ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்த தொழிலாளர்களின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இச்சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீஸார் விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

CHELLA

Next Post

ஆஹா…. ஏய் எங்ககிட்டயேவா…..? இந்தா வரேண்டி போலீஸ் பைக்கையே ஆட்டைய போட்ட 2️ பேர் அதிரடி கைது……!

Wed Jul 5 , 2023
பொதுவாக பொதுமக்களிடமிருந்து ஏதாவது ஒரு பொருள் காணாமல் போனால் அதனை காவல்துறையினருக்கு தெரிவித்தால் அந்த பொருளை காவல் துறையினர் கண்டுபிடித்து தருவார்கள். ஆனால் இங்கே ஒரு வித்தியாசமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. அதாவது காவல்துறையைச் சேர்ந்த ஒருவரின் இருசக்கர வாகனத்தையே 2 கில்லாடி திருடர்கள் திருடிச் சென்றுள்ளனர்.அதாவது மதுரை கரிமேடு குற்றப்பிரிவில் பணியாற்றுபவர் பாலமுருகன் (40) இவருக்கு ரோந்து பணிக்காக மாநகர காவல் துறை சார்பாக ஒரு இருசக்கர வாகனம் வழங்கப்பட்டது. […]
police

You May Like