சமீப காலமாக தமிழகத்தில் தலைநகர் சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பெண்களை வைத்து விபச்சாரம் செய்வது தொடர் கதையாக இருந்து வருகிறது. இதுகுறித்து ரகசிய தகவல் கிடைத்ததை தொடர்ந்து, அவ்வப்போது விபச்சார தடுப்பு பிரிவு காவல்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டு பலரை கைது செய்து வருகிறார்கள்.
அந்த வகையில், திருச்சி-கரூர் பைபாஸ் சாலையில் இருக்கின்ற ஒரு மசாஜ் சென்டரில் விபச்சாரம் நடைபெறுவதாக காவல்துறையினருக்கு ரகசியமாக தகவல் கிடைத்துள்ளது. அதனை அடிப்படையாகக் கொண்டு, சம்பவ இடத்திற்கு விரைந்த விபச்சார தடுப்பு பிரிவு காவல்துறையினர் அதிரடி சோதனையில் இறங்கினர்.
அப்போது தமிழகத்தைச் சேர்ந்த 3️ இளம் பெண்களை வைத்து விபச்சார தொழில் செய்து வந்தது வெட்ட வெளிச்சம் ஆகியது. அரைகுறை ஆடைகளுடன் இருந்த 3 இளம் பெண்களை காவல்துறையினர் மீட்டு உள்ளனர். அதோடு மசாஜ் சென்டர் உரிமையாளரான மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த நீரு என்ற 39 வயது பெண்ணை கைது செய்துள்ளனர் மீட்கப்பட்ட மூன்று இளம் பெண்களும் அரசு காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டிருக்கிறார்கள்.