மாணவர்களே கவனம்…! ஜூன்‌ 27-ம்‌ தேதி முதல்‌ தேர்வு…! விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்….!

10 மற்றும் 11-ம் வகுப்பு துணைத்தேர்வுக்கு இன்று மாலை வரை விண்ணப்பிக்கலாம் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது..

தமிழகத்தில் பொதுத்தேர்வில்‌ தேர்ச்சி பெற தவறிய 10, 11-ம்‌ வகுப்பு மாணவர்களுக்கு துணைத்தேர்வு ஜூன்‌ 27-ம்‌ தேதி முதல்‌ நடைபெற உள்ளது. இந்த தேர்வினை எழுதுவதற்கு இன்று மாலை வரை பள்ளி மாணவர்கள்‌ தாங்கள் படித்த பள்ளியின்‌ மூலமாகவும்‌, தனித்தேர்வர்கள்‌ அரசு தேர்வுத்துறை சேவை மையங்கள்‌ மூலமாகவும்‌ விண்ணப்பிக்க வேண்டும்‌.


இந்த நாட்களில்‌ விண்ணப்பம்‌ செய்யாதவர்கள்‌ சிறப்பு அனுமதி திட்டத்தில்‌ 30, 31 ஆகிய தேதிகளில்‌ விண்ணப்பிக்கலாம்‌.10-ம்‌ வகுப்பு மாணவர்களுக்கான துணைத்தேர்வுகள்‌ ஜூன்‌ மாதம்‌ 27 முதல்‌ ஜூலை மாதம்‌ 4-ம்‌ தேதி வரையில்‌ நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

வெள்ளை பூசணி ஜூஸ் குடித்தால் வெள்ளையா மாறலாம்!... ஆரோக்கியத்திற்கும் ரொம்ப நல்லது!

Sat May 27 , 2023
சரும அழகு மற்றும் உடல் ஆரோக்கியத்திற்கு பல நன்மைகளை வழங்குவதற்கு வெள்ளை பூசணி ஜூஸ் உதவுகிறது. வெள்ளை பூசணி ஜூஸில் வைட்டமின் ஏ,சி, கால்சியம், இரும்பு, மெக்னீசியம், பொட்டாசியம் மற்றும் துத்தநாகம் உள்ளிட்ட பல ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இது உடல் ஆரோக்கியத்துக்கு பல்வேறு நன்மைகளை வழங்குகிறது.வெள்ளை பூசணியில் உள்ள வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் முடி வளர்ச்சிக்கு தேவையான ஊட்டச்சத்தை வழங்குகின்றன. மேலும் இதில் உள்ள ஆக்ஸிஜனேற்ற பண்புகள் சருமத்தை இயற்கையாகவே […]
white pumpkin

You May Like