பஞ்சாப் – பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியின்போது பஞ்சாப் வீரர் முஷீர் கானை விராட் கோலி கிண்டல் செய்யும் விதமாக பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பஞ்சாப் கிங்ஸ் மற்றும் பெங்களூரு அணிக்கான ஐபிஎல் தொடர் நேற்று நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி, முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனைத் தொடர்ந்து, பெங்களூரு அணியின் பந்துவீச்சை தாக்குபிடிக்க முடியாமல் பஞ்சாப் அணி 101 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்த போட்டியில் பஞ்சாப் அணியின் 6-வது அறிமுக வீரராக முஷீர் கான் களமிறங்கினார். அப்போது, அவரை விராட் கோலி கிண்டல் செய்தது தான், தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அப்போது, விராட் கோலி மைதானத்தில் ஒரு வெறிபிடித்த மனிதனைப் போல இருந்தார். ஆர்சிபி கேப்டன் ரஜத் படிதர் அணியை வழிநடத்த திரும்பி, துணை ஜிதேஷ் சர்மாவிடம் இருந்து கேப்டன் பொறுப்பை ஏற்றுக்கொண்டாலும், முதல் சில ஓவர்களில் அணிக்காக களமிறங்கியவர் கோலிதான். பஞ்சாப் வீரர் முஷீர் கான் தனது முதல் பந்தை சந்திக்க தயாரான போது ”தண்ணீர் பாட்டில் தூக்கும் பையன் தானே” என்று சொன்னது சமூக வலைதளங்களில் வீடியோ வைரலாகி வருகிறது.
இந்த செயலுக்கு ரசிகர்களும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். ஒரு அறிமுக வீரருக்கு எதிராக பற்றிய கோலி பேசியது “வெட்கக்கேடானது” என்றும், அது தேவையற்றது என்றும் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஆனால், மற்றொரு தரப்பினர், கோலி அவ்வாறு சொல்லவில்லை என்றும் இந்த நெருக்கடியான சூழலில் இளம் வீரரை பஞ்சாப் களமிறக்கி உள்ளதாக சொன்னதாகவும், விராட் கோலிக்கு ஆதரவாக சிலர் பதிவிட்டு வருகின்றனர். இந்தப் போட்டியின் இறுதியின் 102 ரன்கள் எடுத்து, பெங்களூரு அணி 4-வது முறையாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது குறிப்பிடத்தக்கது.