இந்த 12 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழை வெளுத்து வாங்கும்.. வானிலை மையம் தகவல்.!

UP rain alert 11zon

தமிழ்நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது.. பகல் நேரத்தில் வெயில் அடித்தாலும், மாலை அல்லது இரவு நேரத்தில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது.. குறிப்பாக சென்னை, திருவள்ளூர், விழுப்புரம் மாவட்டங்கள் அதே போல் தென் மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் என தமிழ்நாடு முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது.


இந்த நிலையில் தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை தொடரும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.. வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் “ தென் தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.. ஆந்திர பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.. இதன் காரணமாக இன்று ஒரு சில இடங்களிலும் தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் தமிழகத்தில் 12 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.. அதன்படி, மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், கோவை, திண்டுக்கல், கன்னியாகுமரி, தென்காசி, தேனி. தூத்துக்குடி, திருநெல்வேலி, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More : வருவாய் பற்றாக்குறையால் தடுமாறும் தமிழகம்.. உத்தரப் பிரதேசத்தை விட பின்தங்கிய அவலம்..!! – அன்புமணி விமர்சனம்

RUPA

Next Post

ICU-வில் பெண் நோயாளியை பாலியல் பலாத்காரம் செய்த ஊழியர்..!! வலியால் துடிதுடித்த பரிதாபம்..!!

Tue Sep 23 , 2025
ஹரியானா மாநிலம் கைதல் மாவட்டத்தில் உள்ள சிக்னஸ் என்ற தனியார் மருத்துவமனையில் நடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இங்கு, அறுவை சிகிச்சை முடிந்து தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) அனுமதிக்கப்பட்டிருந்த ஒரு பெண் நோயாளிக்கு, இரவு நேரத்தில் மருத்துவமனை ஊழியர் ஒருவரால் பாலியல் வன்கொடுமை நடந்ததாக கூறப்படுகிறது. இச்சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட பெண் தனது கணவரிடம் கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவரது குடும்பத்தினர், குற்றம் சாட்டப்பட்ட ஊழியர் ஆஷிஷை […]
Rape 2025 6

You May Like