மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் படம் வரும் 30-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் இப்படம் வெளியாகிறது.. ஐமேக்ஸ் வடிவத்தில் வெளியாகும் முதல் தமிழ்ப் படம் பொன்னியின் செல்வன் தான். சமீபத்தில், பொன்னியின் செல்வன் படத்தின் டிரைலர் மற்றும் ஆடியோ வெளியீட்டு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்தது. இந்த வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினர்களாக கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் கலந்து கொண்டனர்.

இந்நிலையில் பொன்னியின் செல்வன் ஆடியோ வெளியீட்டு விழாநேற்று முன் தினம் சன் டிவியில் ஒளிபரப்பப்பட்டது.. அந்த விழாவில் நடிகர் ரஜினி பேசிய வீடியோ ட்விட்டரில் வைரலாகி வருகிறது.. அதில் மணிரத்னம் இயக்கத்தில் தளபதி படத்தில் நடித்த அனுபவம் குறித்து ரஜினி பகிர்ந்து கொண்டார்.. “ தளபதி பட படப்பிடிப்பின் போது முதலில் ஓரிரு நாட்கள் ரொம்ப கஷ்டமாக இருந்தது.. ஸ்டாக்ஷாட் மாதிரி ஸ்டாக் எக்பிரஷன் வைத்திருப்போம்.. பயம், காதல், ஆச்சர்யம் ஆகியவற்றை நடித்து காட்ட ஒரு வழக்கமான எக்பிரஷன் வைத்திருப்போம்.. அதை எல்லாம் நடித்து காட்டினால் மணி ரத்னம் ஒப்புக்கொள்ள மாட்டார்.. No…no.. You feel.. you feel-ன்னு சொல்வாரு.. என்ன ஃபீல் எனக்கு ஒன்னு புரியல.. ரொம்ப கஷ்டப்பட்டு.. பிறகு என்ன பன்றதுன்னு தெரியாமல் கமலுக்கு போன் செய்து பேசினேன்.” என்று தெரிவித்தார்..
ரஜினியை இந்த பேச்சை கேட்டு மணிரத்னம், பிரபு, விக்ரம், ஐஸ்வர்யா ராய், ஜெயம் ரவி, சுஹாசின் மணி ரத்னம் என அனைவரும் விழுந்து விழுந்து சிரித்தனர்.. இந்த வீடியோ தற்போது ட்விட்டரில் வைரலாகி வருகிறது..
சோழர்களின் வரலாற்றை பேசும், பீரீயாடிக்கல் – ஆக்ஷன் படமாக இப்படம் உருவாகி வருகிறது.. மணி ரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் லைகா புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்தில் ஜெயம் ரவி அருள்மொழி வர்மனாகவும், விக்ரம் ஆதித்த கரிகாலனாகவும், கார்த்தி வந்தியத்தேவனாகவும், ஐஸ்வர்யா ராய் நந்தினி, மந்தாகினி என 2 வேடங்களிலும், த்ரிஷா குந்தவையாகவும், சரத்குமார் பெரிய பழுவேட்டரையாகவும் நடிக்க உள்ளனர்.. இப்படத்திற்காக ஒரு நட்சத்திர பட்டாளமே இணைந்துள்ளனர்..

இப்படத்தின் டீசர், ட்ரெய்லர், பாடல்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து நிலையில் படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்குக் நாள் அதிகரித்து வருகிறது.. இந்த நிலையில் பொன்னியின் செல்வன் படத்தின் புரோமஷன் பணிகளில் படக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.. ஹைதராபாத், கேரளா, கர்நாடகா, மும்பை, டெல்லி என நாட்டின் முக்கிய நகரங்களில் பயணம் மேற்கொண்டு வருகின்றனர்..