6 மணிக்கு மேல ரஜினிக்கு அந்த மூட் வந்திரும்.. லேட் ஆனால் டென்ஷன் ஆகிடுவார்..!! ஏவிஎம் ஸ்டூடியோவில் நடந்த மேட்டர்..? – பிரபலம் பளீச்..

rajini

இந்திய திரையுலகின் சூப்பர் ஸ்டாராக திகழும் ரஜினிகாந்த், இன்று வரை ரசிகர்களின் இதயத்தில் தனி இடத்தைப் பிடித்துள்ளார். சாதாரண கண்டக்டராக இருந்து இன்று ஆசியாவின் மிக அதிக சம்பளம் பெறும் நடிகராக உயர்ந்திருக்கும் ரஜினி, ஒரு படத்துக்கு 200 கோடி ரூபாய்வரை சம்பளம் வாங்குகிறார் என கூறப்படுகிறது.


அவரது புகழ் எவ்வளவு உயர்ந்திருந்தாலும், ரஜினி எப்போதும் தன்னுடைய எளிமையைத் தக்கவைத்துக் கொண்டிருப்பவர். புகழின் உச்சியில் இருந்தாலும், அவர் “நான் இன்னும் ஒரு சாதாரண மனிதன் தான்” என்ற மனநிலையுடன் வாழ்கிறார். அதுவே இவரை இன்று வரை மக்கள் சூப்பர் ஸ்டாராக கொண்டாட வைக்கும் முக்கிய காரணம் என்று ரசிகர்கள் பெருமையாக கூறுகின்றனர். புகழின் உச்சியில் இருக்கும் ரஜினிகாந்த் வாழ்க்கையில் நடந்த சுவாரஸ்ய சம்பவம் குறித்து தெரியவந்திருக்கிறது.

அதாவது ரஜினிகாந்த் நடித்த சிவா படத்தின் ஷூட்டிங் ஏவிஎம் ஸ்டூடியோவில் நடந்திருக்கிறது. அப்போது மாலை ரஜினிகாந்த்தை ஸ்டில்ஸ் ரவி புகைப்படம் எடுக்க வந்திருக்கிறார். உடனடியாக ரஜினிகாந்த்தோ, என்ன நீங்களும் ஷாட்டுக்கு ஷாட் புகைப்படம் எடுப்பீர்களா என்று கேட்க; ரவி கோபப்பட்டு அங்கிருந்து கிளம்பிவிட்டாராம்.

அதன் பிறகு அவரை மீண்டும் அழைத்து ‘என்ன சார் கோபப்பட்டீர்களா?’ என்று கேட்டுவிட்டு; எனக்கு உடல்நிலை சரியில்லை அதனால்தான் அப்படி பேசிவிட்டேன் என்றுள்ளார். அதனைத் தொடர்ந்து சிவா படத்தின் இயக்குநர் ரவியிடம் வந்து, ‘நீங்கள் தவறாக எடுத்துக்கொள்ளாதீர்கள். அவருக்கு ஆறு மணிக்கு மேலே தண்ணி அடிக்கும் நியாபகம் வந்துவிடும். லேட்டாகிவிட்டதாக டென்ஷனில் இருக்கிறார்’ என்று தெரிவித்திருக்கிறார். இந்தத் தகவலை ஸ்டில்ஸ் ரவி ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

Read more: இன்ஸ்டா காதலியுடன் ஆசை தீர உல்லாசம்..!! திருமண டார்ச்சரால் மாணவியை கொன்று புதைத்த ராணுவ வீரர்..!

Next Post

திருமணத்திற்கு முந்தைய பாலியல் உறவு இன்று சர்வ சாதாரணமாகிவிட்டது..!! இளைஞர் வழக்கில் ஐகோர்ட் கிளை பரபரப்பு தீர்ப்பு..!!

Wed Nov 19 , 2025
நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த தேவா விஜய் என்பவருக்கு எதிராகத் திண்டுக்கல்லை சேர்ந்த இளம்பெண் ஒருவர் அளித்த பாலியல் புகாரை, சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. தேவா விஜய், தன்னைத் திருமணம் செய்துகொள்வதாக வாக்குறுதி அளித்து நீண்டகாலம் பாலியல் உறவு கொண்டதாகவும், பின்னர் திருமணத்திற்கு மறுத்து ஏமாற்றியதாகவும் கூறி, அந்த இளம்பெண் வள்ளியூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி தேவா […]
Sex Court 2025

You May Like