மீண்டும் புதுப்பொலிவுடன் ரிலீசாகிறது ரஜினியின் ’பாபா’ திரைப்படம்..!! குஷியில் ரசிகர்கள்..!!

ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 2002ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் பாபா. இந்தப் படத்திற்கு கதை, திரைக்கதை எழுதியதுடன் ரஜினிகாந்தே படத்தை தயாரித்தும் இருந்தார். அண்ணாமலை, வீரா, பாட்ஷா படங்களின் தொடர் வெற்றிக்கு பிறகு ரஜினிகாந்த் நடிப்பில் நான்காவது முறையாக இந்த பாபா படத்தை இயக்கினார் இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா. கதாநாயகியாக மனிஷா கொய்ராலா நடிக்க, முக்கிய வேடங்களில் கவுண்டமணி, டெல்லி கணேஷ், சுஜாதா, எம்.என்.நம்பியார், ஆஷிஷ் வித்யார்த்தி, சாயாஜி ஷிண்டே, சங்கவி, கருணாஸ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

மீண்டும் புதுப்பொலிவுடன் ரிலீசாகிறது ரஜினியின் ’பாபா’ திரைப்படம்..!! குஷியில் ரசிகர்கள்..!!

ஏ.ஆர்.ரஹ்மான் இந்தப் படத்திற்கு இசையமைத்திருந்தார். பிருந்தா, பிரபுதேவா மற்றும் லாரன்ஸ் ஆகியோர் நடன இயக்குநர்களாக பணிபுரிந்தனர். பாபாஜியை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட இந்த படம், வெளியான சமயத்தில், பல அதிர்வலைகளை ஏற்படுத்தியது. குறிப்பாக இந்தப் படத்தில் ரஜினி அடிக்கடி காட்டும் அந்த பாபா முத்திரை, படம் வெளியான சமயத்தில் குழந்தைகளையும் வசீகரித்து, இப்போது வரை அவருக்கான ஒரு தனி அடையாளமாகவே கருதப்படுகிறது. இந்நிலையில், தற்போது இந்தப் படம் மீண்டும் புதுப்பொலிவுடன் புதிய திரையிடலுக்கு தயாராகி உள்ளது. இதற்காக முற்றிலும் புதிய கோணத்தில் இந்தப் படம் மறு படத்தொகுப்பு செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் நவீன தொழில்நுட்பத்திற்கேற்ப கலர் கிரேடிங் செய்யப்பட்டு டிஜிட்டலில் ஒவ்வொரு பிரேமும் இன்னும் மேம்படுத்தப்பட்டுள்ளது.

மீண்டும் புதுப்பொலிவுடன் ரிலீசாகிறது ரஜினியின் ’பாபா’ திரைப்படம்..!! குஷியில் ரசிகர்கள்..!!

மேலும் ‘மாயா மாயா ‘, ‘சக்தி கொடு’, ‘கிச்சு கிச்சு’ என ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் ரசிகர்களின் மனதில் நீங்காமல் நிறைந்துள்ள இந்தப் படத்தின் பாடல்கள் அனைத்தும் டால்பி மிக்ஸ் ஒலி அமைப்புக்கு மாற்றப்பட்டு உள்ளதால் மீண்டும் ஒரு புதிய அனுபவத்தை ரசிகர்களுக்கு தரும் என்பதில் சந்தேகமே இல்லை. படத்திற்கான சிறப்பு சப்தங்களுக்கும் இன்னும் விறுவிறுப்பு கூட்டப்பட்டுள்ளன. ஆகவே விரைவில் புதுப்பொலிவுடன் கூடிய பாபா படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகவுள்ளது.

CHELLA

Next Post

#கள்ளக்குறிச்சி :3 வது பெண் குழந்தை என்று கருக்கலைப்பு..உயிரை இழந்த பரிதாபம்..!

Mon Nov 21 , 2022
கள்ளக்குறிச்சி மாவட்ட பகுதியில் விளாந்தாங்கலில் வடிவேல் (45) என்பவர் ஐடிஐ படித்துவிட்டு, போலி சான்றிதழ் வைத்து அரசிடம் அனுமதி பெற்று தியாகதுருகம், அசகளத்தூர், விருகாவூர் என  5க்கும் மேற்பட்ட இடங்களில் மருந்து கடைகள் நடத்தி வருகின்றார்.  கடலூர் மாவட்ட பகுதியில் கீழக்குறிச்சியில் கோவிந்தராஜ் மற்றும் அமுதா (28) என்ற தம்பதி வாழ்ந்து வந்துள்ளனர். இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் இருந்த நிலையில் 3வது முறையாக அமுதா கர்ப்பிணியானார். இதனை தொடர்ந்து […]
bigstock Silhouette Of Pregnant Young L 1200x

You May Like