சூடுபிடிக்கும் மாநிலங்களவை தேர்தல்..!! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்..!! அதிமுக மீது கடும் கோபத்தில் தேமுதிக..?

DMK ADMK 2025

மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்குகிறது.


தமிழ்நாட்டில் 6 மாநிலங்களவை எம்பிக்களின் பதவிக்காலம் விரைவில் முடிகிறது. இதனால், மாநிலங்களவை தேர்தல் ஜூன் 19ஆம் தேதி நடைபெறவுள்ளது. அதே நாள் மாலையில் வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது. இதில், திமுக 4 மற்றும் அதிமுக இரண்டு இடங்களை இந்த தேர்தலில் பெறும். மாநிலங்களவைக்கான தேர்தல் ஜூன் 19 ஆம் தேதி நடைபெறும், அதே நாளில் மாலை 5 மணிக்கு வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.

தமிழ்நாட்டில் தற்போது பமகவின் அன்புமணி ராமதாஸ், தொமுச சண்முகம், சந்திரதேகரன், முகமது அப்துல்லா, வில்சன், வைகோ ஆகியோர் மாநிலங்களவை எம்பிக்களாக உள்ளனர். இவர்களின் பதவிக்காலம் தான் ஜூலை 24ஆம் தேதி முடிகிறது. இந்நிலையில், மாநிலங்களவை தேர்தலுக்கான திமுக வேட்பாளர்களாக வில்சன், கவிஞர் சல்மா, எஸ்.ஆர்.சிவலிங்கம் போட்டியிட உள்ளனர். அதேபோல், திமுக சார்பில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனும் மாநிலங்களவை தேர்தலுக்கு போட்டியிடுகிறார்.

திமுகவுடனான தேர்தல் ஒப்பந்தத்தைத் தொடர்ந்து கமல்ஹாசன் மாநிலங்களவைக்கு தேர்வாகி உள்ளார். கடந்த மக்களவை லோக்சபா தேர்தலில் திமுக கூட்டணியில் மக்கள் நீதி மய்யம் கைகோர்த்தது. அப்போது, 2 லோக்சபா சீட்டும், 1 ராஜ்யசபா சீட்டும் பெற்றுவிட வேண்டும் என கமல்ஹாசன் காய்களை நகர்த்தியிருந்தார். அதன்படியே, தற்போது அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

கடந்த மக்களவை தேர்தல் சமயத்தில், ஒரு லோக்சபா சீட் தருகிறோம், உதயசூரியன் சின்னத்தில் நில்லுங்கள் என கமல்ஹாசனிடம் ஆரம்பத்தில் இருந்தே திமுக தலைமை சொல்லி வந்தது. ஆனால், அவர் அதை ஏற்காமல் தனிச் சின்னத்தில் தான் நிற்போம் என ஒற்றை காலில் நின்றார். இந்நிலையில் தான், தற்போது அவருக்கு ராஜ்யசபா எம்பி சீட் வழங்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, மீண்டும், ராஜ்யசபாவுக்கு செல்ல விருப்பப்பட்ட வைகோவுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.

அதேபோல், அதிமுக சார்பில் இன்பதுரை, தனபால் ஆகியோர் மாநிலங்களவை எம்பி வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். இந்த அறிவிப்பை அதிமுகவின் மூத்த தலைவர் கேபி முனுசாமி வெளியிட்டார். மேலும், தேமுதிகவுக்கு அடுத்த ராஜ்யசபா தேர்தலில் இடம் வழங்கப்படும் என்றும் அவர்களுடனான கூட்டணி தொடருவதாகவும் அதிமுக அறிவித்துள்ளது.

Read More : புரட்டி எடுக்கும் கனமழை!. உடைந்து விழுந்த பாலம்!. 1,200க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் சிக்கி தவிப்பு!. மீட்புப் பணிகள் தாமதம்!

CHELLA

Next Post

”ஒன்றரை வருட திட்டம்; வரலாற்று புத்தகங்களில் பதிவு செய்யப்படும்”!. ரஷ்யா மீதான ட்ரோன் தாக்குதல் குறித்து ஜெலென்ஸ்கி பேச்சு!

Mon Jun 2 , 2025
ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையே நடந்து வரும் போர் முடிவுக்கு வரவில்லை. இப்போது உக்ரைன் ரஷ்ய இராணுவ தளங்களை குறிவைத்துள்ளது. உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி இது குறித்த தகவலை தெரிவித்துள்ளார். அவர் சமூக ஊடகங்களில் ஒரு பதிவைப் பகிர்ந்து கொண்டு உக்ரைன் இராணுவ அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்துள்ளார். உக்ரைன் இந்தத் தாக்குதலை சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பே திட்டமிடத் தொடங்கியதாக ஜெலென்ஸ்கி கூறினார். ரஷ்யாவின் விமானப்படை தளத்தை உக்ரைன் தாக்கியது. […]
ukraine zelensky 11zon

You May Like