ராஜ்யசபா தேர்தல்..!! ஓபிஎஸை கழட்டிவிடும் இபிஎஸ்..!! பாஜக, பாமகவின் ஆதரவை பெறும் அதிமுக..!! இன்று MLA-க்கள் கூட்டம்..!!

EPS OPS 2025

தமிழ்நாட்டில் 6 மாநிலங்களவை எம்பிக்களின் பதவிக்காலம் ஜூலை 24ஆம் தேதி முடிகிறது. இதையடுத்து, புதிய எம்பிக்களை தேர்வு செய்வதற்கான தேர்தல் ஜூன் 19ஆம் தேதி நடைபெறவுள்ளது. அதே நாள் மாலையில் வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது. இதில், திமுக 4 மற்றும் அதிமுக இரண்டு இடங்களை இந்த தேர்தலில் பெறும்.


தமிழ்நாட்டில் பாமகவின் அன்புமணி ராமதாஸ், தொமுச சண்முகம், சந்திரதேகரன், முகமது அப்துல்லா, வில்சன், வைகோ ஆகியோர் மாநிலங்களவை எம்பிக்களாக உள்ளனர். இந்நிலையில், மாநிலங்களவை தேர்தலுக்கான திமுக வேட்பாளர்களாக வில்சன், கவிஞர் சல்மா, எஸ்.ஆர்.சிவலிங்கம் ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர். அதேபோல், திமுக சார்பில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனும் மாநிலங்களவை தேர்தலுக்கு போட்டியிடுகிறார்.

அதே சமயம், அதிமுக சார்பில் இன்பதுரை, தனபால் ஆகியோர் மாநிலங்களவை எம்பி வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் தான், இன்று (ஜூன் 4) அதிமுக எம்.எல்.ஏ.-க்கள் கூட்டம் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எம்பி தேர்தலில் ஓபிஎஸின் ஆதரவு யாருக்கு என்பதில் கேள்விக்குறியாகி உள்ள நிலையில், இந்த கூட்டம் நடைபெறவுள்ளது.

இந்த எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் மாநிலங்களவை உறுப்பினா் தோ்தலில் வாக்களிப்பது குறித்த அறிவுறுத்தல்கள் வழங்கப்படும் என கூறப்படுகிறது. அதிமுகவை பொறுத்தவரை எடப்பாடி பழனிசாமி அணியில் 62 எம்.எல்.ஏக்களும், முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் அணியில் 4 எம்.எல்.ஏக்களும் உள்ளனர். அதே போல், பாஜகவிடம் 4 உறுப்பினா்களும், பாமகவிடம் 5 பேரவை உறுப்பினா்களும் உள்ளனா்.

இந்நிலையில், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீா்செல்வத்தை தவிர்த்து, பாஜக, பாமக கட்சிகளின் ஆதரவைப் பெற அதிமுக தலைமை முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. எனவே, அது குறித்தும் இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

Read More : தமிழ்நாடு முழுவதும் மாபெரும் சிறப்பு முகாம்..!! ரூ.1,000 உரிமைத்தொகை பெற இன்று முதல் விண்ணப்பிக்கலாம்..!!

CHELLA

Next Post

இளைஞர் நீதிக் குழும சமூகப்பணி உறுப்பினர்கள் பணிக்கு விண்ணப்பிக்கலாம்...!

Wed Jun 4 , 2025
இளைஞர் நீதிக் குழுமத்திற்கு சமூகப்பணி உறுப்பினர்கள் பணிக்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; 2015 ஆம் ஆண்டின் இளைஞர் நீதி (குழந்தைகள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு) சட்டம் விதிமுறைகளின்படி தருமபுரி மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள இளைஞர் நீதிக் குழுமத்திற்கு சமூகப்பணி உறுப்பினர்கள் நியமிக்கப்படுவதற்காக கீழே குறிப்பிட்டுள்ள தகுதிகளைக் கொண்ட தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இளைஞர் நீதிக் குழுமத்திற்கு ஒரு […]
job 1

You May Like