போதைப்பொருள் கடத்தல் வழக்கில் சிக்கிய நடிகை…! 19-ம் தேதி நேரில் ஆஜராக ED அதிரடி உத்தரவு…!

போதைப்பொருள் கடத்தல் மற்றும் நுகர்வு வழக்கு தொடர்பாக நடிகை ரகுல் ப்ரீத் சிங்கிற்கு அமலாக்க இயக்குனரகம் நேரில் ஆஜராக கூறி சம்மன் அனுப்பியுள்ளது.

டிசம்பர் 19-ம் தேதி அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு நடிகைக்கு சமன் அனுப்பப்பட்டுள்ள. செப்டம்பர் 2, 2021 அன்று ராகுல் ப்ரீத்திடம் போதைப் பொருள் கிடைத்த வழக்கு தொடர்பாக அமலாக துறை விசாரணை மேற்கொண்டது.


எல்.எஸ்.டி மற்றும் எம்.டி.எம்.ஏ மற்றும் பிற போதைப்பொருட்களை வழங்கும் உயர்தர போதைப்பொருள் கார்டெல் 2017 இல் தெலுங்கானாவின் மதுவிலக்கு மற்றும் கலால் துறையால் கைது செய்யப்பட்ட பின்னர், பணமோசடி தடுப்பு நிறுவனம் கடந்த நான்கு ஆண்டுகளாக இந்த போதைப்பொருள் கடத்தல் மற்றும் நுகர்வு வழக்கை விசாரித்து வருகிறது. அந்த போதைப்பொருள் கும்பலின் பணம் பல்வேறு வழிகளில் மோசடி செய்யப்பட்டதைக் கண்டறிந்ததை அடுத்து, அதன் அடிப்படையில் அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.

Vignesh

Next Post

குட் நியூஸ்...! ஓய்வூதியத்தை ரூ.2,750 ஆக உயர்த்த அமைச்சரவை அனுமதி...! முழு விவரம் உள்ளே...

Sat Dec 17 , 2022
ஆந்திர மாநிலத்தில் சமூக ஓய்வூதியத்தை மாதம் ஒன்றுக்கு ரூ.2,500ல் இருந்து ரூ.2,750 ஆக உயர்த்த மாநில அமைச்சரவை அனுமதி அளித்தது. உயர்த்தப்பட்ட ஓய்வூதியம் ஜனவரி 1, 2023 முதல் அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநில அரசின் அறிக்கையின்படி, இந்த ஓய்வூதியம் அதிகரித்ததன் காரணமாக மாநில அரசுக்கு ரூ.130.44 கோடி கூடுதல் செலவு ஏற்படும். மாநிலத்தில் தற்போது 62 லட்சம் ஓய்வூதியதாரர்கள் உள்ளனர், மேலும் நடப்பு மாதத்தில் 2.43 லட்சம் […]

You May Like