14 வயது முதலே பலாத்காரம்..!! கர்ப்பிணியாக இருக்கும்போது கூட விடல..!! பாதிரியாரின் பகீர் செயல்..!!

தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் அருகே கீழக்கோட்டை கிராமத்தில் உள்ள தேவாலயத்தில், வினோத் ஜோஸ்வார் என்ற நபர் பாதிரியராக பணியாற்றி வருகிறார். இந்த சூழலில், அந்த தேவாலயத்திற்கு பாட்டு கிளாஸுக்கு வந்த பெண்ணை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளார். 14 வயது முதலே அப்பெண்ணை மிரட்டி பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. தற்போது அந்த பெண், திருமணமாகி கர்ப்பமாக இருக்கும் நிலையில், வினோத் ஜோஸ்வா அந்த பெண்ணை வாட்ஸ் அப் மூலம் தொடர்பு கொண்டுள்ளார்.


மீண்டும் அவர் அப்பெண்ணுக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட பெண், கடம்பூர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், வினோத் ஜோஸ்வாவை பிடித்து விசாரித்துள்ளனர். இந்த விசாரணையில் கர்ப்பிணி பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக ஜோஸ்வா ஒப்புக் கொண்டதை அடுத்து, அவரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

CHELLA

Next Post

செந்தில் பாலாஜிக்கு நாளை காலை இதய அறுவை சிகிச்சை..!! அமைச்சர் மா.சுப்பிரமணியன் பரபரப்பு தகவல்..!!

Tue Jun 20 , 2023
காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு, நாளை காலை இதய அறுவை சிகிச்சை செய்யப்பட உள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார். சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி, நீதிமன்ற உத்தரவுப்படி தற்போது சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அங்கு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். மேலும், இருதய நோய் சிறப்பு நிபுணர்களின் கண்காணிப்பில் […]
WhatsApp Image 2023 06 14 at 7.18.08 AM

You May Like