இளம்பெண்ணை பலாத்காரம் செய்த ரேபிடோ ஓட்டுநர்..!! ஆனால் சம்மதத்துடன் தான் உடலுறவு..!! பள்ளிக்கரணையில் அதிர்ச்சி சம்பவம்..!!

Rape 2025 5

சென்னை மதுரவாயல் பகுதியில் தனது குடும்பத்துடன் வசித்து வரும் திரிபுராவைச் சேர்ந்த 22 வயது இளம்பெண் ஒருவரின் பாலியல் வன்கொடுமை புகார் தொடர்பாக, ரேபிடோ (Rapido) ஓட்டுநர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதே சமயம், கைது செய்யப்பட்ட ஓட்டுநர் அளித்த வாக்குமூலம், இச்சம்பவத்தில் எதிர்பாராத திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.


நேற்று முன்தினம், அந்த இளம்பெண் தனது பயணத்திற்காக ரேபிடோ சேவையை நாடியுள்ளார். அவர் முதலில் பள்ளிக்கரணைக்குச் சென்றுள்ளார். பின்னர், மீண்டும் வேளச்சேரி பாலத்தில் இருந்து அதே ரேபிடோ ஓட்டுநரான தேனி மாவட்டத்தைச் சேர்ந்த சிவகுமாரை அழைத்து தனது வீட்டிற்குத் திரும்பியுள்ளார். வாகனத்தில் இருந்து இறங்கிய உடனேயே, இளம்பெண் தனது கணவரிடம், தன்னை அந்த ரேபிடோ ஓட்டுநர் மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிவித்துள்ளார்.

இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அவரது கணவர், உடனடியாக வானகரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில், காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, ஓட்டுநர் சிவகுமாரை உடனடியாகக் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட சிவகுமாரிடம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில், அவர் அளித்த தகவல்கள் போலீசாரையே திகைக்க வைத்தன. சிவகுமார் அளித்த வாக்குமூலத்தில், “முதலில் பள்ளிக்கரணைக்குச் சென்ற இளம்பெண், 20 நிமிடங்களில் மீண்டும் தன்னை வேளச்சேரியில் இருந்து வீட்டிற்கு அழைத்துச் செல்லுமாறு அழைத்தார். அப்போது, வரும் வழியில் இளம்பெண் தன்னிடம் வாகனம் ஓட்ட கற்றுக் கொடுக்குமாறு கேட்டார். இருவரும் நெருக்கமாக பழகியதன் விளைவாக, இருவருக்கும் இடையே சம்மதத்துடன் உடலுறவு நடந்தது” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், வீட்டிற்கு அருகில் இறக்கிவிடப்பட்டபோது, அந்த இளம்பெண் தன்னிடம் ரூ.2 லட்சம் பணம் கேட்டு மிரட்டியதாகவும், தான் பணம் கொடுக்க மறுத்ததால், கோபமடைந்த அவர் உடனடியாக தனது கணவரிடம் பாலியல் வன்கொடுமை என்று பொய்ப் புகார் கூறியதாகவும் சிவகுமார் கூறியுள்ளார். இதையடுத்து, பெண்ணின் கணவர் தன்னை கல்லால் தாக்கிவிட்டு காவல்துறையிடம் ஒப்படைத்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இரு தரப்பினரும் முற்றிலும் மாறுபட்ட குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ள நிலையில், காவல்துறையினர் இந்த வழக்கின் உண்மையை அறிய தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர். உண்மை வெளிவந்த பின்னரே, பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டு மற்றும் ஓட்டுநரின் மிரட்டல் குற்றச்சாட்டு ஆகிய இரண்டுக்கும் தெளிவு கிடைக்கும்.

Read More : இனிப்புகளை ஃபிரிட்ஜில் இப்படி வைத்தால் சுவை மொத்தமா போயிடும்..!! எப்போதும் புதுசு மாதிரி இருக்க இதை பண்ணுங்க..!!

CHELLA

Next Post

உங்களிடம் வங்கிக் கணக்கு இருக்கா? இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க! அதிக பணம் சம்பாதிக்கலாம்!

Tue Oct 28 , 2025
ஒரு வங்கிக் கணக்கில் உள்ள அனைத்துப் பணத்தையும் யாரும் ஒரே நேரத்தில் பயன்படுத்துவதில்லை. பலரும் தங்கள் தேவைக்கேற்ப அந்தப் பணத்தை பயன்படுத்துகிறார்கள். இருப்பினும், வங்கியில் பயன்படுத்தப்படாத பணத்திற்கு வங்கி மிகக் குறைந்த வட்டியை வழங்குகிறது. ஒவ்வொரு வங்கியும் சேமிப்புக் கணக்குகளுக்கு மிகக் குறைந்த வட்டியை வழங்குகிறது. இருப்பினும், வங்கிக் கணக்கில் பயன்படுத்தப்படாத பணத்திற்கு அதிக வட்டியைப் பெறலாம். நிலையான வைப்புத்தொகையைப் போலவே இந்த வட்டியையும் நீங்கள் பெறலாம். இதற்காக நீங்கள் […]
Money Rupees

You May Like