பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்திற்கு பின்னர் சமூக ஊடகங்களில் கடும் கண்டனங்கள் எழுந்தன. இதையடுத்து, X
வலைதளத்தில் RCB அணியால் பகிரப்பட்டிருந்த ஒரு கொண்டாட்ட வீடியோ கடும் விமர்சனத்திற்கு உள்ளானது. தற்போது அந்த வீடியோவை RCB தனது பக்கத்திலிருந்து நீக்கியுள்ளது.
இதைத் தொடர்ந்து, அணியின் சார்பில் அதிகாரப்பூர்வமாக இரங்கல் அறிக்கையும் வெளியிடப்பட்டுள்ளது. அதில், “RCB அணியின் வருகையை எதிர்பார்த்து பெங்களூரு நகரில் பெருந்திரளான ரசிகர்கள் கூடியிருந்தனர். இந்த கூட்டநெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்த துயரமான செய்தியை ஊடகங்கள் வழியாக பெற்றோம். இது எங்களுக்குத் மிகுந்த மன வருத்தத்தை அளிக்கிறது.
மக்கள் அனைவரின் பாதுகாப்பும் நலனும் எங்களுக்கு மிகவும் முக்கியமானது. இந்த துயர நிகழ்வில் உயிரிழந்தவர்களுக்கு எங்களின் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம். அவர்களது குடும்பங்களுக்கு எங்கள் மனமார்ந்த அனுதாபங்களும் இருப்பதாக தெரிவித்துக் கொள்கிறோம். இந்த சம்பவம் குறித்து தகவல் வந்ததும், உள்ளூர் நிர்வாக அதிகாரிகளிடம் ஆலோசனை கேட்டோம் மற்றும் அவர்களது வழிகாட்டலின்படி செயல்பட்டோம். எங்கள் ரசிகர்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டுகிறோம்.” எனக் கூறப்பட்டது.
பிரதமர் நரேந்திர மோடியும் X தளத்தில் பதிலளித்து தனது ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவித்தார். “பெங்களூரில் நடந்த விபத்து முற்றிலும் மனதைப் பதற வைக்கும். தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுடன் எனது எண்ணங்கள் உள்ளன. காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய என் பிரார்த்தனைகள் உள்ளன,”
என்று அவர் தெரிவித்துள்ளார்.
Read more: ஹார்வர்ட் பல்கலை.யில் புதிய வெளிநாட்டு மாணவர்கள் சேர தடை..!! – அதிபர் டிரம்ப் புதிய உத்தரவு