ரெடிமேட் ஆடை உற்பத்தி ஆலை..!! ரூ.3 லட்சம் மானியம் வழங்கும் தமிழ்நாடு அரசு..!! விண்ணப்பிப்பது எப்படி..?

Dress 2025

தமிழ்நாடு அரசு, பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் சமூகங்களை மேம்படுத்தும் நோக்கில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்த சூழலில், தையல் தொழிலில் ஈடுபட்டிருக்கும் அந்த சமூகத்தினருக்காக உருவாக்கப்பட்டிருக்கும் ஒரு சிறப்பு திட்டம் குறித்து தற்போது பார்ப்போம்.


தமிழ்நாடு அரசின் இந்த முயற்சி, தையல் தொழில் மூலம் வாழ்க்கையை முன்னேற்ற விரும்பும் பெண்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. 2022-23ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட இந்த திட்டத்தின் மூலம், ஆயத்த ஆடைகள் (Readymade Garments) உற்பத்தி செய்யக்கூடிய சிறு தொழில் நிறுவனங்களை அமைக்க உதவியாக ரூ.3 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது.

இந்த மானியத்தின் மூலம், தொழிலில் ஈடுபடும் நபர்கள் தங்களின் உற்பத்தி திறனை மேம்படுத்தி, சுயதொழில் வாயிலாக நிலையான வருமானம் உருவாக்கக்கூடிய சூழ்நிலை உருவாகும். குறிப்பாக, சமூகத்தில் பொருளாதார ரீதியாக பின்தங்கியவர்களுக்கு இது பெரும் ஆதரவாக விளங்கும்.

தகுதியானவர்கள் இந்த திட்டத்தின் கீழ் பயன் பெற சில நிபந்தனைகளும் உள்ளது. பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பைச் சேர்ந்தவராக இருத்தல் வேண்டும். தையல் தொழிலில் ஈடுபட்டுள்ள அனுபவம் அல்லது சுயதொழில் தொடங்கும் மனப்பாங்கும் இருக்க வேண்டும்.

திட்டத்தில் சேர விரும்புவோர், அரசின் இணையதளங்களிலோ அல்லது மாவட்ட நலத்துறை அலுவலகங்களிலோ விண்ணப்பிப்பதற்கான தகவல்களை பெறலாம். முழுமையான விவரங்கள், விண்ணப்ப படிவம் மற்றும் வழிமுறைகள் அங்கு வழங்கப்படும். தொழில் வாய்ப்புகளை விரிவாக்கி, அந்தந்த சமூகங்களுக்கு வாழ்வாதாரத்தை உறுதி செய்யும் நோக்குடன் உருவாக்கப்பட்டுள்ள இந்த திட்டம், நவீன தொழில்முறை சார்ந்த சுயதொழில்கள் வழியாக சமூக நலத்தை வலுப்படுத்தும் முயற்சியாக பார்க்கப்படுகிறது.

Read More : “வேலையை இழந்த கணவரை அவமானப்படுத்திய மனைவி”..!! நீதிமன்றம் வழங்கிய பரபரப்பு தீர்ப்பு..!!

CHELLA

Next Post

40 இளம்பெண்கள்..!! அரைகுறை ஆடையுடன் குத்தாட்டம்..!! பணத்தை அள்ளி வீசும் வாடிக்கையாளர்கள்..!! அதிர்ச்சி வீடியோ..!!

Mon Aug 25 , 2025
மகாராஷ்டிர மாநிலம் மும்பை புறநகர் நெருல் பகுதியில் சில தனியார் பார்கள் சட்ட விதிகளை மீறி செயல்பட்டு வருவதாக புகார் எழுந்துள்ளது. ஆபாச நடனம், சட்டவிரோத பணப்பரிவர்த்தனை ஆகியவை இந்த பார்கள் மூலம் நடப்பதாக கூறப்படுகிறது. இதுதொடர்பான சில வீடியோ காட்சிகளும் சமூக வலைதளங்களில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒரு வீடியோவில், தனியார் பாரில் நடன அழகிகள் ஆடிக் கொண்டிருக்கும்போது, அங்கிருந்த வாடிக்கையாளர்கள் அவர்களிடம் பணத்தை வீசும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. […]
Mumbai 2025

You May Like