40 ஆண்டுகளுக்கு பிறகு கிடைத்த அங்கீகாரம்.. கேரள அரசின் சிறந்த நடிகைக்கான விருதை பெற்றார் ரேவதி…

மலையாளத் திரையுலகில் பெரும் பங்களிப்பை வழங்கிய நடிகை ரேவதி, சுமார் 40 ஆண்டுகளுக்குப் பிறகு முதன்முறையாக கேரள மாநிலத்தால் கௌரவிக்கப்பட்டார்.

பிரபல நடிகை ரேவதி தமிழ், மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.. குறிப்பாக தமிழ் மற்றும் மலையாள திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.. ஆரம்பக்கட்டத்தில் கதாநாயகியாக நடித்து வந்த அவர் தற்போது குணச்சித்திர படங்களில் நடித்து வருகிறார்.. 3 வெவ்வேறு பிரிவுகளில் 3 தேசிய திரைப்பட விருதுகள் மற்றும் 6 பிலிம்பேர் விருதுகள் உட்பட பல விருதுகளை அவர் வென்றுள்ளார்..


இந்நிலையில் சிறந்த நடிகைக்கான கேரள அரசின் விருதை ரேவதி பெற்றுள்ளார்.. திருவனந்தபுரத்தில் நேற்று முன் தினம் கேரள மாநில திரைப்பட விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது.. இதில் சிறந்த நடிகைக்கான விருதை வென்றார்.. மலையாளத்தில் தனது கெரியரை தொடங்கியதில் ரேவதி சிறந்த நடிகைக்கான விருதை வாங்குவது இதுவே முதமுறை.. பூதகாலம் படத்தில் நடித்ததற்காக அவருக்கு சிறந்த நடிகைக்கான விருது வழங்கபப்ட்டது..

இந்த விழாவில் பேசிய ரேவதி கேரளாவில் வளர்ந்த தனது பெற்றோர்கள் தான் இந்த விருதில் மிகவும் மகிழ்ச்சியடைவார்கள் என்று தெரிவித்தார்.. மேலும், “பல வருடங்களாக உங்கள் அன்பை நான் பல படங்கள் மூலம் பெற்றுள்ளேன். ஆனால் விருது பெறுவதற்கு இத்தனை வருடங்கள் ஆனது.. இந்த விருதை யாருக்கு அர்ப்பணிக்கிறேன் என்பதில் எனக்கு பல கேள்விகள் எழுகின்றன. அதை எனக்கே அர்ப்பணிக்க விரும்புகிறேன். அதற்கு நான் தகுதியானவள் என்று நினைக்கிறேன்..” என்று தெரிவித்தார்..

கடந்த மே மாதம் கேரள அரசின் விருதுகள் அறிவிக்கப்பட்ட போது ரேவதியின் விருது அனைவரின் கவனத்தை ஈர்த்தது. மலையாள திரையுலகிற்கு பெரும் பங்களிப்பை வழங்கிய ரேவதி இன்னும் விருது வாங்கவில்லை என்பது பலரின் கேள்வியாக இருந்தது.. 1980களின் பிற்பகுதியில் ககோதிகாவிலே அப்புப்பந்தாடிகள் படத்தில் நடித்ததற்காக அவருக்கு விருது கிடைக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர். மலையாளத்தில் இன்னும் சிறந்த நகைச்சுவைப் படங்களில் ஒன்றாகக் கொண்டாடப்படும் கிலுக்காம் படத்தில் தனது அசாத்திய நடிப்பு திறமையை வெளிப்படுத்தி இருந்தார்.. தேவாசுரம், புரவிர்தம், ஒத்தயடிப் பாடல்கள், மங்கம்மா, மாயமாயூரம் மற்றும் மோலி ஆன்ட்டி ராக்ஸ் உள்ளிட்ட பல பங்களில் நடித்திருந்தார்.. ஆனால் மலையாளத்தில் அவருக்கு அங்கீகாரம் கிடைக்காத நிலையில், தற்போது சிறந்த நடிகைக்கான விருது கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது..

1newsnationuser1

Next Post

இந்த App உங்க மொபைலில் டவுன்லோட் செய்ய வேண்டாம்...! கண்ணீர் விட்டு அழுத சீரியல் நடிகை

Mon Sep 26 , 2022
‘சரவணன் மீனாட்சி’, ‘ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி’ போன்ற பல திரைப்படங்கள் மற்றும் சீரியல்களில் நடித்துள்ள பிரபல தமிழ் தொலைக்காட்சி நடிகை லக்ஷ்மி வாசுதேவன், ரசிகர்களிடம் அன்பான வேண்டுகோளுடன் கண்ணீர் மல்க வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். வீடியோவில் அவரது பெற்றோர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் உட்பட வாட்ஸ்அப்பில் உள்ள அனைத்து தொடர்புகளுக்கும் தனது மார்பிங் செய்யப்பட்ட ஆபாச புகைப்படங்கள் பரப்பப்பட்டதாக கூறியுள்ளார். தனது நெருங்கிய வட்டாரத்திற்கு தன்னைப் பற்றி தெரியும் […]
images 75

You May Like