தமிழகத்திற்கு விடுக்கப்பட்ட “ரெட் அலர்ட்” வாபஸ்…! இருந்தாலும் இது இருக்கு?

தென்மேற்கு வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதியினால் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் பரவலாக கனமழை முதல் மிக கனமழை பெய்து வருகிறது. அதிலும் குறிப்பாக டெல்டா மாவட்டங்களில் நேற்று விடிய விடிய மழை கொட்டி தீர்த்து இருக்கிறது. கனமழையின் காரணமாக தமிழகத்தில் 27 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.


இந்நிலையில் வங்கக்கடலில் தொடர்ந்து நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தில் இன்று அதிகனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது வடக்கை நோக்கி நகர்வதால் தமிழகத்தில் மழையின் தீவிரம் குறையா வாய்ப்பு இருப்பதாக கூறி, நிர்வாக காரணங்களுக்காக விடுக்கப்பட்ட “ரெட் அலர்ட்” எச்சரிக்கை வாபஸ் பெறப்பட்டது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் “ரெட் அலர்ட்” வாபஸ் பெறப்பட்டாலும் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

தென்கிழக்கு வங்கக்கடலில் நவம்பர் 16ஆம் தேதி அன்று மீண்டும் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு இருக்கிறது என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்து இருக்கிறது. தமிழகத்தின் 17 மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்தில் ஓரிரு இடங்களில் இடியுடன் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

Newsnation_Admin

Next Post

பிக்பாஸ் வீட்டில் நாடகம்.. தனலெட்சுமியின் முகத்திரையை கிழித்தெறிந்த நண்பர்கள்.!

Sat Nov 12 , 2022
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள நபர்களில் ஒருவரான தனலெட்சுமி ஈரோடு மாவட்டம் பகுதியில் வசித்து வருபவர். இவர் தனது ரீல்ஸ் வீடியோ மூலம் பிரபலமாகியவர்.. இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ள நிலையில், சீசன் 6 நிகழ்ச்சியில் சாமானியராக உள்ளே நுழைந்துள்ளார். தொடக்கத்தில் தனலெட்சுமி உள்ளதை அப்படியே பேசி வருகிறார் என்றும், தைரியமாக தவறை சுட்டிக்காட்டுகிறார் மற்றும் டாஸ்க்குகளிலும் மிரட்டி வருகிறார் என்றும் புகழாரம் சூட்டினார்கள். ஆனால், சமீப காலங்களில் தனலெட்சுமி அதிகமாக […]
Screenshot 20221112 113023 751

You May Like