கோவிட் தொற்றின் பரவல் குறைந்ததால் இந்தியாவுக்கு பெரிய நிம்மதி கிடைத்துள்ளது.
இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் கோவிட் பரவல் மீண்டும் அதிகரித்துள்ளது. LF.7, XFG, JN.1, NB.1.8.1 உள்ளிட்ட பல மாறுபாடுகள் கொரோனா பரவலுக்கு காரணம் என்று கூறப்படுகிறது. இதில் NB.1.8.1 என்ற புதிய துணை வகைகளில் ஒன்றாகும். இது Omicron குடும்பத்தின் ஒரு பகுதியாகும். இந்த புதிய மாறுபாடுகள் காரணமாக நாட்டின் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வந்தது. அதன்படி மொத்த பாதிப்பு எண்ணிக்கை 7000ஐ கடந்தது. எனவே பொதுமக்கள் கூட்ட நெரிசல் மிக்க இடங்களுக்கு செல்லும் போது மாஸ்க் அணிய வேண்டும் என்றும், கொரோனா தடுப்பு வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று நிபுணர்கள் அறிவுறுத்தினர்.
இந்த நிலையில் கோவிட்-19 தொற்று புதிய மாறுபாட்டின் பரவல் குறைந்ததால் இந்தியாவுக்கு பெரிய நிம்மதி கிடைத்துள்ளது. தொடர்ந்து மூன்றாவது நாளாக, இந்தியாவில் கோவிட் தொற்று பாதிப்பு எண்ணிக்கையில் சரிவு ஏற்பட்டுள்ளது.. சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் சமீபத்திய புள்ளிவிவரங்களின்படி, நாடு முழுவதும் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 7000-க்கும் கீழ் குறைந்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில், நாடு முழுவதும் ஒரே நாளில் 428 கோவிட்-19 தொற்று வழக்குகள் குறைந்துள்ளன. இதன் மூலம், கோவிட் பாதிப்பின் எண்ணிக்கை இப்போது 6836 ஆகக் குறைந்துள்ளது. திங்கட்கிழமை முன்னதாக, தொற்று பாதிப்பு 119 குறைவு காணப்பட்டது.
சுகாதார அமைச்சகத்தின் கூற்றுப்படி, கடந்த 24 மணி நேரத்தில் கேரளாவில் அதிகபட்சமாக 261 வழக்குகள் குறைந்துள்ளன. இது தவிர, குஜராத்தில் 185, டெல்லியில் 94, மகாராஷ்டிராவில் 28, ஆந்திராவில் 18, சிக்கிமில் 13, அசாமில் 3, தெலுங்கானா-பீகார்-சத்தீஸ்கர் மற்றும் கோவாவில் தலா 1 வழக்குகள் குறைந்துள்ளன.
இந்த சரிவுக்குப் பிறகு, கேரளாவில் மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை இப்போது 1659 ஆக உள்ளது. தற்போது, குஜராத்தில் 1,248, கர்நாடகாவில் 696, டெல்லியில் 555, மகாராஷ்டிராவில் 512, உத்தரபிரதேசத்தில் 278, ராஜஸ்தானில் 251, தமிழ்நாட்டில் 222 மற்றும் ஹரியானாவில் 103 பாதிப்புகள் உள்ளன.
Read More : மீண்டும் தொழில்நுட்பக் கோளாறு.. அவசரமாக தரையிறக்கப்பட்ட ஏர் இந்தியா விமானம்.. இந்த முறை எங்கு?