அயோத்தியில் உள்ள ஸ்ரீ ராமர் கோயிலில், ராம தர்பார் (Ram Darbar) உருவங்களின் முதல் படங்கள் வெளியிடப்பட்டுள்ளன. 2025 ஜூன் 5 அன்று, கங்கா தசமி பண்டிகையை முன்னிட்டு, கோயிலின் முதல் மாடியில் உள்ள ராம தர்பார் மற்றும் ஏழு பிற கோயில்களில் பிரதிஷ்டை விழா நடைபெற்றது.
உத்தர பிரதேசத்தின் அயோத்தியில் ஸ்ரீ ராமஜென்மபூமி புண்ணிய ஷேத்ரா அறக்கட்டளை சார்பில் பிரமாண்ட ராமர் கோவில் கட்டப்பட்டு உள்ளது. இதன் முதற்கட்ட பணிகள் முடிந்து, கடந்த ஆண்டு ஜனவரியில், பிரதமர் மோடி தலைமையில் நடந்த விழாவில் குழந்தை ராமர் சிலை பிராண பிரதிஷ்டை செய்யப்பட்டது. இதையடுத்து, உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் நாள்தோறும் குழந்தை ராமரை தரிசித்து வருகின்றனர். அதேசமயம், எஞ்சிய கட்டுமானப் பணிகள் கோவிலில் முழுவீச்சில் நடந்து வந்தன. கோவில் சுவர்களில் இடம்பெறக்கூடிய ராமாயண கதைகளுக்கான சுவரோவியம் தவிர இதர பணிகள் அனைத்தும் சமீபத்தில் முடிவடைந்தன. இதையடுத்து, கோவில் வளாகத்தில் இடம்பெற்றுள்ள எட்டு கோவில்களின் கும்பாபிஷேக விழா நேற்று கோலாகலமாக நடந்தது.
இதற்கான யாகசாலை பூஜைகள் மற்றும் சடங்குகள் கடந்த 3ம் தேதி துவங்கின. ராமர் பிறந்த, ‘அபிஜித் முகூர்த்தம்’ எனப்படும் நெருக்கடி மற்றும் தடைகளை அகற்றும் நேரமான காலை 6:30 மணிக்கு, எட்டு கோவில்களின் விக்ரகங்களுக்கு ஒரே நேரத்தில் பிராண பிரதிஷ்டை செய்யப்பட்டது. கோவிலின் முதல் தளத்தில், வேத மந்திரங்கள் முழங்க ராம ராஜ்ஜியத்தை பிரதிபலிக்கும் ராம தர்பாருக்கு பிராண பிரதிஷ்டை செய்யப்பட்டது.
ராமருடன் சீதாதேவி சிம்மாசனத்தில் எழுந்து அருளியுள்ள நிலையில், லட்சுமணன், பரதன் மற்றும் ஹனுமன் ஆகியோர் ஒன்றாக உள்ள சிலை இடம்பெற்றுள்ளது. ராமரின் அவதாரமான சேஷ அவதாரம், சிவன், விநாயகர், ஹனுமன், சூரிய கடவுள், பகவதி தேவி மற்றும் அன்னபூர்ணா தேவி விக்ரகங்கள் கோவில் வளாகத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டன.
கோவில் கருவறை கோபுரம் தங்க முலாம் பூசப்பட்டுள்ளது. கோவிலின் முதல் தளத்தில் உள்ள ராம் தர்பார் வளாகத்தில் ராஜா ராமர், சீதை மற்றும் அனுமன், லட்சுமணன் சிலைகள் நிறுவப்பட்டு உள்ளன. இந்த சன்னதி முழுக்க ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் வெள்ளை பளிங்கு கற்களால் உருவாக்கப்பட்டு கண்ணை கவரும் வகையில் அழகுபடுத்தப்பட்டுள்ளது. ராஜா ராமர், சீதை சிலைகள் பளிங்கு சிம்மாசனத்தில் வைக்கப்பட்டுள்ளன. அருகே அனுமன், லட்சுமணன் சிலைகள் அமர்ந்த நிலையில் வடிவமைக்கப்பட்டு உள்ளன. இதேபோல் கோவில் வளாகத்தில் மேலும் 7 புதிய கோவில்கள் கட்டப்பட்டு சிலைகள் நிறுவப்பட்டன.
ஸ்ரீ ராமஜென்மபூமி புண்ணிய ஷேத்ரா அறக்கட்டளை சார்பில் பிரமாண்ட ராமர் கோவில் கட்டப்பட்டு உள்ளது. இந்த நிகழ்வின் போது ராமர் தர்பாரின் முதல் படம் வெளியிடப்பட்டது. முதல்வர் யோகி ஆதித்யநாத் முன்னிலையில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. ஸ்ரீ ராம் ஜென்மபூமி கோயிலின் முதல் தளத்தில் கும்பாபிஷேக சடங்குகளுக்கு முன்னதாக, ராம் தர்பாருக்கு முன்பு முதல்வர் பிரார்த்தனை செய்தார். இந்த நிகழ்வையொட்டி, ராமர் கோயில் பிரமாண்டமாக அலங்கரிக்கப்பட்டது.
அயோத்தியில் உள்ள கோயிலின் முதல் தளத்தில் உள்ள ராமர் தர்பார் இன்று பிரதிஷ்டை செய்யப்பட்டதால், நாடு முழுவதிலுமிருந்து மற்றும் வெளிநாடுகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபட்டு செல்கின்றனர். ராமர், மாதா ஜானகி மற்றும் ஹனுமான் சிலைகள் ராமர் தர்பாரில் நிறுவப்பட்டுள்ளன.
Readmore: Tn Govt : கிராம உதவியாளர் தேர்வு… ஓட்டுநர் உரிமம் வைத்திருந்தால் தேர்வு நடத்த தேவையில்லை…!