குழந்தைகளுக்கு ஆபத்து.. நிமோனியா காய்ச்சல் தடுப்பூசிக்கு தட்டுப்பாடு..? அதிர்ச்சி தகவல்..

தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில், கடந்த ஒரு மாத காலமாக நிமோனியா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பாக்டீரியாவால் ஏற்படும் நிமோனியா காய்ச்சலால் ஆண்டுதோறும் உலகம் முழுவதும் சுமார் 20 லட்சம் குழந்தைகள் இறப்பதாகவும், இதில் 25 சதவீதம் பேர் இந்தியக் குழந்தைகள் எனவும் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றனர். உயிரிழக்கும் 4 குழந்தைகளில் ஒரு குழந்தை இந்தியாவை சேர்ந்தது எனவும் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.


நிமோனியாவுக்கான பி.சி.வி. தடுப்பூசி திட்டத்தை கடந்த 2017 ஆம் ஆண்டு மத்திய அரசு அறிமுகப்படுத்திய நிலையில், கடந்த 2021 ஆம் ஆண்டு ஜூலை மாதம் முதல், தமிழகத்திலும் நிமோனியாவுக்கான பி.சி.வி. தடுப்பூசி திட்டம் தொடங்கப்பட்டது. பி.சி.வி. திட்டத்தில் குழந்தை பிறந்த மூன்று, ஆறு மற்றும் ஒன்பதாவது மாதங்கள் என 3 தவணைகளாக தடுப்பூசி செலுத்தப்படுகிறது.

இந்நிலையில் இந்தியா முழுவதும் தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில், கடந்த ஒரு மாத காலமாக நிமோனியா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் தமிழகம் உட்பட பல மாநிலங்களில், குழந்தைகளுக்கு மீண்டும் நிம்மோனியா காய்ச்சல் பரவ தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே ஹெச்.ஒன். என்.ஒன், டெங்கு, மலேரியா வைரஸ் காய்ச்சல் பாதிப்பு அதிகமாகி வரும் நிலையில், நிம்மோனியா தடுப்பூசி தட்டுப்பாட்டை போக்கி, உரிய நேரத்தில் குழந்தைகளுக்கு செலுத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெற்றோர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

1newsnationuser1

Next Post

இன்றைய தங்கம் விலை நிலவரம் என்ன..? விவரம் உள்ளே..

Mon Sep 26 , 2022
சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.8 உயர்ந்து, ரூ.37,208-க்கு விற்பனையாகிறது.. உக்ரைன் – ரஷ்யா போர் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளது.. கச்சா எண்ணெய், தங்கம் ஆகியவற்றின் விலை உயர்ந்து கொண்டே வருகிறது.. பங்குச்சந்தைகள் சரிந்து வருகின்றன.. பாதுகாப்பு கருதி பல முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையில் இருந்து பணத்தை எடுத்து தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர்.. இதனால் தங்கத்தின் தேவை அதிகரித்துள்ளது.. இந்நிலையில் தங்கம் விலை […]
தங்கம்

You May Like