பிரபல நடிகை வீட்டில் கொள்ளை !! எவ்வளவு பணம் , எவ்வளவு நகை ? தெரியுமா?

நடிகை வீட்டிலேயே ஒரு கும்பல் புகுந்து லட்சணக்கணக்கில் மதிப்பிலான பொருட்களை கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள நடிகை பார்வதி நாயர் வீட்டில் தான் கொள்ளைச் சம்பவம் நடந்துள்ளது. கைக்கடிகாரம் , மடிக்கணி என அனைத்துமே விலை உயர்ந்த பொருட்கள் . மொத்தம் ரூ.9.5 லட்சம் இருக்கும் என கூறப்படுகின்றது. இது தொடர்பாக காவல்நிலையத்தில் பார்வதி நாயர் புகார் அளித்துள்ளார்.

புகாரின் பேரில் ஸ்டெர்லிங் சாலையில் வசித்து வந்த பார்வி நாயர் வீட்டில் போலீசார்மற்றும் தடயவியல் துறையினர் சோதனை நடத்தி தடயங்களை சேகரித்தனர். களவாடப்பட்ட கைக்கடிகாரம் மட்டும் ரூ.3 லட்சம் , மடிக்கணினி ரூ.50,000 மற்றொரு கைக்கடிகாரம் ஒன்றின் விலை ரூ.6 லட்சம் என மொத்தம் 9 லட்சம் ரூபாய் களவாடப்பட்டுள்ளது.

என்னை அறிந்தால் , நிமிர்ந்து நில் போன்ற படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் பார்வதி நாயர். கொள்ளை சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Post

குவைத் அதிபர் குடும்பத்திடமிருந்து பாம் ஜுமெய்ரோ மாளிகையை வாங்கிய அம்பானி … அடேங்கப்பா இத்தனை கோடியா?

Thu Oct 20 , 2022
குவைத்தில் மிகவும் பிரபலமான துபாய் மாளிகையான ஜுமெய்ரோ மாளிகையை வாங்கி உள்ள முகேஷ் அம்பானி எத்தனை கோடி கொடுத்துள்ளார் என்பது பற்றி தகவல்களை பார்க்கலாம். குவைத்தில் மிகவும் பிரபலமான மாளிகை என்றால் பாம் ஜுமெய்ரோ மாளிகை இது. பனை மர வடிவில் அமைக்கப்பட்ட ஒரு அழகான தீவில் அமைந்துள்ளது இந்த மாளிகை இதனை முகேஷ் அம்பானி சுமார் 180 மில்லியன் டாலர் கொடுத்து இதை வாங்கி உள்ளார். இந்திய மதிப்பில் […]
mukesh ambani ril reliance industries bloomberg 1200

You May Like