பாமக பொதுச்செயலாளரை காணவில்லை.. கண்டு பிடித்து கொடுத்தால் ரூ.100 பரிசு..!! – ராமதாஸ்

ramadoss

பாமகவில் அன்புமணி – ராமதாஸ் இருவருக்கும் இடையே கருத்து மோதல் நீடித்து வருவதால் கட்சியில் குழப்பமான சூழல் இருந்து வருகிறது. இந்நிலையில் தைலாபுரத்தில் உள்ள தனது இல்லத்தில் ராமதாஸ் செய்தியாளர்கள் சந்தித்தார். அப்போது பேசிய அவர், மகன் அன்புமணி மீதும் மருமகள் செளமியா மீதும் அடுக்கடுக்கான குற்றசாட்டுகளை முன்வைத்தார்.


கட்சி என்ற மாளிகையில் நான் குடியமர்த்தியவரே என்னை கழுத்தை பிடித்து வெளியே தள்ளும் அளவிற்கு அவருடைய செயல்பாடுகள் உள்ளது.  மாவட்ட செயலாளர்கள் என்னை பார்க்ககூடாது என அவர்களிடம் தெரிவித்து என்னை மானபங்கம் செய்கிறார். குருவுக்கு மிஞ்சிய சீடனாக இருக்கலாம். ஆனால், தந்தையை மிஞ்சிய மகன் இருக்க கூடாது. இதுவே உலளவில் நீதியாகவும், சாஸ்திர சம்பிரதாயமாகும்.

6 வருடத்திற்கு முன் மோடி பதவியேற்புக்கு நான் டெல்லி சென்றேன். நான், அன்புமணி, ஜி.கே.மணி சென்றிருந்தோம். அப்போது அன்புமணி சொன்ன வார்த்தை அப்பா நான் கட்சியை பார்த்துக் கொள்கிறேன் என கூறி விட்டு நான் தவறாக சொல்லி இருந்தால் என்னை மன்னித்து விடுங்கள் என அப்போது கூறினார். 6 வருடங்களுக்கு முன்பே அவருக்கு இது போன்ற எண்ணம் இருந்துள்ளது. அதன்பிறகு அவர் எப்படி தலைவர் ஆனார் என்பது உங்களுக்கு தெரியும் என்றார்.

மேலும் என் பொதுச்செயலாளரை சில காலமாக காணவில்லை.. அவர் 7 ஸ்டார் ஓட்டல் நீச்சல் குளத்தில் மிதந்து கொண்டிருக்கிறார் என கேள்வி பட்டேன். அவரை கண்டு பிடித்து கொடுப்பவர்களுகு ரூ.100 பரிசு வழங்கப்படும் எனக் கூறியது பேசுபொருளாகியுள்ளது. தொடர்ந்த் பேசிய அவர் இதுவரை விஜயின் தவெக கட்சி உடன் பேச்சு வார்த்தை நடத்தவில்லை. எதிர்காலத்தில் தவெக உடன் பேச்சு வார்த்தை நடத்துவது குறித்து நிர்வாகிகளுடன் கலந்து ஆலோசித்து முடிவு எடுக்கபடும் என தெரிவித்தார்.

Read more: என் குடும்ப பெண்களுக்கு அரசியல் வேண்டாம் என சொன்னேன்.. செளமியா என் பேச்சை மதிக்கல..!! – ராமதாஸ் குற்றசாட்டு

Next Post

வேகமெடுக்கும் கோவிட்.. புதிய மாறுபாடுகளை எதிர்த்து போராடும் நாசி வழி தடுப்பு மருந்து.. தடுப்பூசி நிறுவனம் தகவல்..

Thu Jun 12 , 2025
Bharat Biotech says its vaccine is ready to fight new variants.
AA1Fujsd

You May Like