குமரியில் ஆர் எஸ் எஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தளவாய் சுந்தரம் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட நிலையில், எஸ் பி வேலுமணியை எடப்பாடி பழனிச்சாமி நீக்குவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது
கோவை மாவட்டத்தில் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் நூற்றாண்டு விழா நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்த நிகழ்வில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பவகத், தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் பாஜக தலைவர் அண்ணாமலை ஆகியோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் மோகன் பகவத்திற்கு வேல் பரிசாக வழங்கப்பட்டது.
ஆர்.எஸ்.எஸ். நூற்றாண்டு விழாவில் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியும் பங்கேற்றுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அவரும், முன்னாள் பாஜக தலைவர் அண்ணாமலையும் ஒரே இருக்கையில் அமர்ந்திருந்தனர். இந்து முன்னணி நடத்திய மதுரை முருக பக்தர்கள் மாநாட்டில் பெரியார், அண்ணா குறித்த விமர்சனங்கள் அடங்கிய வீடியோ ஒளிபரப்பப்பட்டது. அண்ணா, பெரியாரை விமர்சிக்கும் நிகழ்ச்சியில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் கலந்து கொண்டது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இன்று எஸ்.பி.வேலுமணியும் அண்ணாமலையும் ஒரே இருக்கையில் அமர்ந்திருந்தது கவனத்தை ஈர்த்துள்ளது.
சில மாதங்களுக்கு முன்பு குமரியில் ஆர் எஸ் எஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தளவாய் சுந்தரம் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட நிலையில், எஸ் பி வேலுமணியை எடப்பாடி பழனிச்சாமி நீக்குவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆர் எஸ் எஸ் நூற்றாண்டு விழாவில் முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி கலந்து கொண்டது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், BJP, RSS-யிடம் அதிமுகவை முழுமையாக அடகு வைத்துவிட்டார்கள் என சேகர்பாபு விமர்சனம் செய்துள்ளார்.
Read more: சினிமா பார்ட்டிகளில் போதைப்பொருள் சப்ளை.. விசாரணை வளையத்திற்குள் வரும் நடிகர் ஸ்ரீகாந்த்..!!