#Flash: விருதுநகர்.. பட்டாசு ஆலையில் வெடி விபத்து.. 3 பேர் பலி.. மற்றவர்களின் நிலை என்ன?

screenshot35908 1674126734 1678089273

விருதுநகர், காரியாப்பட்டி அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 3 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

விருதுநகர் மாவட்டம் காரியாப்பட்டி அருகே வடகரையில் பட்டாசு ஆலை ஒன்று இயங்கி வருகிறது. இந்த பட்டாசு ஆலையில் இன்று காலை வெடி விபத்து ஏற்பட்டது. இதில் 3 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.. 2 பெண்கள் உட்பட 3 தொழிலாளர்கள் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறையினர், பட்டாசு ஆலைக்குள் சிக்கிய பணியாளர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்..


இந்த வெடி விபத்தில் சவுண்டம்மாள், கருப்பையா உட்பட 3 பேர் உயிழந்தனர். 5 பேர் படுகாயமடைந்த நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் ஒருவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது. இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

இந்த பட்டாசு விபத்தில், ஒரு கட்டிடம் இடித்து தரைமட்டமானது. இந்த வெடி விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ராஜா சந்திரசேகர் என்பவருக்கு சொந்தமான இந்த பட்டாசு ஆலையில், இன்று ஃபேன்சி ரக பட்டாசுகளை தயாரித்த போது இந்த விபத்து ஏற்பட்டதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

Read More : 2,299 கிராம உதவியாளர் பணி… மாவட்ட ஆட்சியர்களுக்கு வருவாய் ஆணையர் அதிரடி உத்தரவு…!

RUPA

Next Post

பிரம்மோஸ் ஏவுகணையை கண்டு பதறிய பாகிஸ்தான்: புதிய வான் பாதுகாப்பு அமைப்புகளை வாங்க திட்டம்..!!

Wed Jun 11 , 2025
இந்தியாவின் பிரம்மோஸ் ஏவுகணைகளால் ஏற்பட்ட அழிவால் அதிர்ச்சியடைந்த பாகிஸ்தான், இப்போது இந்தியாவை எதிர்கொள்ள புதிய வான் பாதுகாப்பு அமைப்புகளை வாங்க திட்டமிட்டுள்ளது. இந்தியா – பாகிஸ்தான் இடையே கடந்த மாதம் நடந்த ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற இராணுவ நடவடிக்கையின் போது, இந்திய விமானப்படை, S-400 வான் பாதுகாப்பு அமைப்புகள், மற்றும் தரையிலிருந்து ஏவப்படும் ஏவுகணைகள் பயன்படுத்தி 6 பாகிஸ்தான் விமானங்களை சுட்டு வீழ்த்தி, 4 முக்கிய ரேடார் மையங்களை அழித்தது […]
brahmos

You May Like