உக்ரைன் மீது அடுத்தடுத்து தாக்குதல்களை நிகழ்த்தி வரும் நிலையில் ரஷ்ய நாட்டிடம் ஆயுதங்கள் பற்றாக்குறைாயாக உள்ளதாக வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
உக்ரைன் நாட்டின் மீது கடந்த 8 மாதங்களாக தொடர்ந்து போர் தொடுத்து வருகின்றது ரஷ்யா. இதில் பல நகரங்கள் பெரும் பாதிப்பை சந்தித்தனர். பலர் மரணம் அடைந்தனர். ஆனாலும் போருக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படவில்லை. எனவே உக்ரைன் ராணுவம் ரஷ்ய படைகளிடம் சரணடைய மறுத்து துணிச்சலோடு இன்னும் களத்தில் போரிட தயாராக உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு கிரீமியாவை ரஷ்யாவுடன் இணைக்கும் பாலத்தில் நடந்த குண்டு வெடிப்பிற்கு உக்ரைன் காரணம் என ரஷ்யா கூறியது.
இதையடுத்து மீண்டும் உக்ரைன் மீது போர் தொடங்கியது. ராக்கெட் ஏவுகனைகளால் அடுத்தடுத்து தாக்குதல் நடத்தியது ரஷ்யா. இந்நிலையில் பாதுகாப்பு வல்லுநர்கள் ஆயுதம் பற்றாக்குறையாக இருப்பதாக சந்தேகம் தெரிவித்துள்ளனர். ரஷ்ய ஆயுதங்கள் குறைந்ததாக மேற்கத்திய பாதுகாப்பு அதிகாரிகள் தகவல் கூறுகின்றனர்.
அவர்களின் ஆயுதங்கள் தீர்ந்துவிட்டன என களத்தில் உள்ள ரஷ்ய தளபதிக்கும் தெரியும். எங்களுக்கும் தெரியும் என இங்கிலாந்தின் உளவு அமைப்பு தலைவர் ஜெரோமி குறிப்பிட்டுள்ள குறிப்பிடத்தக்கது. இதனால் போர் நிற்குமா ? அல்லது மற்ற நாடுகள் உதவுமா என்ற நிலைப்பாடு உருவாகி உள்ளது.