ரஷ்யாவிடம் ஆயுதங்கள் பற்றாக்குறை ? போர் நிலவரம் என்ன ?

உக்ரைன் மீது அடுத்தடுத்து தாக்குதல்களை நிகழ்த்தி வரும் நிலையில் ரஷ்ய நாட்டிடம் ஆயுதங்கள் பற்றாக்குறைாயாக உள்ளதாக வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.


உக்ரைன் நாட்டின் மீது கடந்த 8 மாதங்களாக தொடர்ந்து போர் தொடுத்து வருகின்றது ரஷ்யா. இதில் பல நகரங்கள் பெரும் பாதிப்பை சந்தித்தனர். பலர் மரணம் அடைந்தனர். ஆனாலும் போருக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படவில்லை. எனவே உக்ரைன் ராணுவம் ரஷ்ய படைகளிடம் சரணடைய மறுத்து துணிச்சலோடு இன்னும் களத்தில் போரிட தயாராக உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு கிரீமியாவை ரஷ்யாவுடன் இணைக்கும் பாலத்தில் நடந்த குண்டு வெடிப்பிற்கு உக்ரைன் காரணம் என ரஷ்யா கூறியது.

இதையடுத்து மீண்டும் உக்ரைன் மீது போர் தொடங்கியது. ராக்கெட் ஏவுகனைகளால் அடுத்தடுத்து தாக்குதல் நடத்தியது ரஷ்யா. இந்நிலையில் பாதுகாப்பு வல்லுநர்கள் ஆயுதம் பற்றாக்குறையாக இருப்பதாக சந்தேகம் தெரிவித்துள்ளனர். ரஷ்ய ஆயுதங்கள் குறைந்ததாக மேற்கத்திய பாதுகாப்பு அதிகாரிகள் தகவல் கூறுகின்றனர்.

அவர்களின் ஆயுதங்கள் தீர்ந்துவிட்டன என களத்தில் உள்ள ரஷ்ய தளபதிக்கும் தெரியும். எங்களுக்கும் தெரியும் என இங்கிலாந்தின் உளவு அமைப்பு தலைவர் ஜெரோமி குறிப்பிட்டுள்ள குறிப்பிடத்தக்கது. இதனால் போர் நிற்குமா ? அல்லது மற்ற நாடுகள் உதவுமா என்ற நிலைப்பாடு உருவாகி உள்ளது.

Next Post

பொன்னியின் செல்வன் மீண்டும் சாதனை ..!!!

Sun Oct 16 , 2022
பொன்னியின் செல்வன் திரைப்படம் விக்ரம் படத்தின் வசூலை முறியடித்து சாதனைபடைத்துள்ளது. தமிழ் சினிமா வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு வசூலை குவித்த படங்களில் கமலஹாசன் நடித்த விக்ரம் படத்தையும் மிஞ்சி பொன்னியின் செல்வன் திரைப்படம் வசூலை ஈட்டியுள்ளது. .படம் வெளியான இரண்டு வாரங்களில் உலக அளவில் 400 கோடிக்கும் அதிகமான வசூலைப் பெற்று தற்போது 500 கோடியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. அந்த சாதனை நிகழ்த்தப்பட்டுவிடும் என்றே பாக்ஸ் ஆபீஸ் […]
பொன்னியின் செல்வன் கோடி

You May Like