ரூ.60,100 சம்பளம்.. மத்திய புலனாய்வு பிரிவில் வேலை..10 ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்..!!

job 1 1

மத்திய வெளியுறவு துறையின் கீழ் செயல்படும் புலனாய்வு பிரிவில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பும் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக மோட்டார் போக்குவரத்து பிரிவில் பாதுகாப்பு உதவியாளர் (Security Assistant) பதவிக்கு ஆட்சேர்ப்பு நடைபெறுகிறது.


காலிப்பணியிடங்கள்: அதிகாரப்பூர்வ தகவலின்படி, தேசிய அளவில் 37 இடங்களில் செயல்படும் புலனாய்வு அலுவலகங்களில் மொத்தம் 455 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

பணியிட விவரம்:

* பாதுகாப்பு உதவியாளர் (Security Assistant) 455

வயது வரம்பு: 2025 செப்டம்பர் 28-ஆம் தேதியின்படி விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 27 வயது வரை இருக்க வேண்டும். அதே நேரத்தில், சமூக அடிப்படையிலான தளர்வுகளும் வழங்கப்பட்டுள்ளன.

  • எஸ்சி/எஸ்டி பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு கூடுதலாக 5 ஆண்டுகள் தளர்வு.
  • ஒபிசி பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு கூடுதலாக 3 ஆண்டுகள் தளர்வு.
  • அரசு பணியில் உள்ளவர்கள் அதிகபட்சம் 40 வயது வரை விண்ணப்பிக்கலாம்.
  • மேலும், கணவரை இழந்த பெண்கள், விவாகரத்து பெற்றவர்கள் மற்றும் சட்டப்படி பிரிந்து வாழ்பவர்கள் ஆகியோருக்கும் சிறப்பு தளர்வு வழங்கப்பட்டுள்ளது.
  • பொதுப் பிரிவு பெண்களுக்கு அதிகபட்சம் 35 வயது வரை,
  • ஒபிசி பிரிவு பெண்களுக்கு 38 வயது வரை,
  • எஸ்சி/எஸ்டி பிரிவு பெண்களுக்கு 40 வயது வரை விண்ணப்பிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

தகுதிகள்:

* அங்கீகரிக்கப்பட்ட பாடத்திட்டத்தில் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

* மோட்டார் வாகன ஓட்டுநர் உரிமம் அவசியம்.

* இருசக்கர வாகன ஓட்டுநர் உரிமையும் கட்டாயம்.
மோட்டார் மெக்கானிசம் குறித்த அடிப்படை அறிவு இருக்க வேண்டும்.

* குறைந்தது 1 ஆண்டு கார் ஓட்டிய அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

* விண்ணப்பிக்கும் மாநிலத்தைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும்.

சம்பள விவரம்: நிலை 3 கீழ் அடிப்படை சம்பளமாக ரூ.21,700 முதல் அதிகபடியாக ரூ.69,100 வரை வழங்கப்படும். மேலும் சிறப்பு பாதுகாப்பு ஒதுக்கீடாக அடிப்படை சம்பளத்தில் இருந்து 20 சதவீதம் அளிக்கப்படும். விடுமுறை நாட்களில் பணி செய்தால் அதற்கான தொகை வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை: இப்பணியிடங்களுக்கு இரண்டு கட்டத் தேர்வு முறையின் மூலம் ஆட்சேர்ப்பு செய்யப்படுகிறது.

முதல் கட்டத் தேர்வு (Tier I): ஆன்லைன் வழியில் கொள்குறி (Objective) வகையில் நடைபெறும். மொத்தம் 100 கேள்விகள் 100 மதிப்பெண்கள். ஒவ்வொரு தவறான பதிலுக்கும் 0.25 மதிப்பெண்கள் குறைக்கப்படும் (Negative Marking).

குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண்கள்:

  • பொது பிரிவு – 30
  • ஒபிசி – 28
  • எஸ்சி/எஸ்டி – 25
  • EWS – 30

இரண்டாம் கட்டத் தேர்வு (Tier II): வாகனம் ஓட்டும் திறன் மற்றும் நேர்காணல் அடிப்படையில் நடைபெறும். மொத்தம் 50 மதிப்பெண்கள். இதில் குறைந்தது 40% மதிப்பெண்கள் பெற வேண்டும். இரண்டு கட்டத் தேர்விலும் பெற்ற மதிப்பெண்கள் சேர்த்து தகுதியானவர்கள் இறுதியாக தேர்வு செய்யப்படுவார்கள்.

எப்படி விண்ணப்பிப்பது? https://www.mha.gov.in/en என்ற இணையதளத்தில் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். இதற்கான ஆன்லைன் விண்ணப்பம் செப்டம்பர் 6-ம் தேதி முதல் தொடங்கி, 28-ம் தேதி வரை பெறப்படுகிறது.

Read more: பெரும் சோகம்!. லாரி மீது கார் மோதியதில் 5 இளம் தொழிலதிபர்கள் பலி!. பட்னாவில் அதிர்ச்சி!

English Summary

Salary Rs.60,100.. Job in Central Intelligence Agency..10th class pass holders can apply..!!

Next Post

இந்த 1 பழம் போதும்.. இதய ஆரோக்கியம் முதல் நோயெதிர்பு சக்தி அதிகரிப்பது வரை.. ஆச்சர்ய நன்மைகள்!

Thu Sep 4 , 2025
உங்களுக்கு பழங்கள் சாப்பிடுவது மிகவும் பிடிக்குமா? ஆம், எனில், டிராகன் பழம் உங்களுக்கு ஒரு நல்ல தேர்வாகும். இதில் வைட்டமின் சி, நார்ச்சத்து மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிரம்பியுள்ளன. ஒரு டிராகன் பழம் உங்கள் தினசரி வைட்டமின் சி தேவைகளைப் பூர்த்தி செய்ய உதவுகிறது. உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது மற்றும் ஆரோக்கியமான சருமத்தை மேம்படுத்துகிறது. இதில் உள்ள நார்ச்சத்து செரிமானத்தை மேம்படுத்தவும் ஆரோக்கியமான குடலைப் […]
fruits new dragon 1

You May Like