பேங்க் ஆஃப் இந்தியா (BOI) Probationary Officers பதவிக்கு விண்ணப்பங்களை வரவேற்பதாக அறிவித்துள்ளது. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் bankofindia.co.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி பிப்ரவரி 25 ஆகும். இதன் மூலம் பேங்க ஆஃப் இந்தியா வங்கியில் உள்ள 500 பணியிடங்கள் நிரப்பப்படும்..
பொது/EWS பிரிவினருக்கு குறைந்தபட்ச தகுதி மதிப்பெண்கள் 40% ஆக இருக்கும். SC/ST/OBC/PWD பிரிவைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள், சம்பந்தப்பட்ட பிரிவினருக்காக ஒதுக்கப்பட்ட காலியிடங்களை நிரப்பினால், பொது/EWS பிரிவினருக்கு நிர்ணயிக்கப்பட்ட மதிப்பெண்களுடன் 5% தளர்வு கிடைக்கும். வங்கி தனது விருப்பப்படி குறைந்தபட்ச தகுதி மதிப்பெண்களை மாற்றலாம்.
- வயது வரம்பு: விண்ணப்பதாரர்கள் 20 முதல் 29 வயதுக்குள் இருக்க வேண்டும்.
- விண்ணப்பக் கட்டணம்: GENERAL/ EWS/ OBC விண்ணப்பதாரர்கள் விண்ணப்பக் கட்டணமாக ரூ. 850 செலுத்த வேண்டும். SC/ST/PWD விண்ணப்பதாரர்களுக்க் ரூ. 175 விண்ணப்பக் கட்டணம்.
- தேர்வு முறை : ஆன்லைன் தேர்வு, குரூப் டிஸ்கஷன் மற்றும் நேர்முக தேர்வு மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்..
- சம்பளம் : ரூ. 36000 முதல் ரூ.63,840 வரை..
எப்படி விண்ணப்பப்பிது..?
- bankofindia.co.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்வையிடவும்
- career என்ற Taba-ஐ கிளிக் செய்யவும்
- “Recruitment of Probationary in JMGS-I upon passing Post Graduate Diploma in Banking & Finance(PGDBF) Project No. 2022-23/3 Notice dated 01.02.2023” என்பதைக் கிளிக் செய்யவும்.
- உங்களை பதிவு செய்து தொடரவும்
- விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்தவும்
- தேவையான அனைத்து ஆவணங்களையும் பதிவேற்றவும்
- பின்னர் Submit என்பதை கிளிக் செய்யவும்.
- எதிர்கால குறிப்புக்காக பிரிண்ட் அவுட் எடுத்துக்கொள்ளவும்.
பேங்க ஆஃப் இந்தியாவின் ஆட்சேர்ப்புக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதோ : https://bankofindia.co.in/documents/20121/8561835/Webnotice+2022-23_3+%28Notice%29.pdf