விளையாட்டு வீரர்களுக்கு சல்யூட்!. இன்று சர்வதேச ஒலிம்பிக் தினம்!. பலரும் அறியாத சில சுவாரஸ்ய தகவல்கள்!.

international olympic day 11zon

உலகின் முதன்மையான விளையாட்டுப் போட்டி என்றால் அது ஒலிம்பிக் தான். சர்வதேச விளையாட்டு நிகழ்வான ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்ல வேண்டும் என்பது பல விளையாட்டு வீரர்களுக்கு பெருங்கனவு. அப்படி பல சர்வதேச நாடுகளை சேர்ந்த வீரர்களால் போற்றப்படும் ஒலிம்பிக் போட்டியின் தினம் இன்று.


ஏன் சர்வதேச ஒலிம்பிக் தினம் என கொண்டாடப்படுகிறது? ஒலிம்பிக் விளையாட்டின் ஐடியாவை அனைவரிடத்திலும் கொண்டு செல்லும் நோக்கத்தில் இந்த நாள் காலண்டரில் மார்க் செய்யப்பட்டுள்ளது. கடந்த 1948 முதல் இந்த நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. இதே நாளில் கடந்த 1894இல் பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி அமைக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. 1896இல் கிரீஸ் நாட்டின் ஏதன்ஸில் மாடர்ன் டே ஒலிம்பிக்கின் முதலாவது ஒலிம்பிக் போட்டி நடைபெற்றது. இதனை சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி ஒருங்கிணைத்தது. ஆண்டுதோறும் ஜூன் 23 அன்று ஒலிம்பிக் தினம் கொண்டாடப்படுகிறது. இது விளையாட்டு, ஆரோக்கியம் மற்றும் உலகெங்கிலும் உள்ள அனைவரையும் சுறுசுறுப்பாகவும், ஒன்றாக இணைந்திருப்பதையும் வலியுறுத்துகிறது.

ஒலிம்பிக் கொடியில் மொத்தம் ஆறு வண்ணங்கள் இருக்கும். வெள்ளை நிறத்தைப் பின்புலமாகக் கொண்ட கொடியின் மீது ஊதா, மஞ்சள், கருப்பு, பச்சை, சிவப்பு ஆகிய ஐந்து நிறங்களில் வளையங்கள் வரையப்பட்டிருக்கும். இந்த வளையங்கள், ஆசியா, ஆப்பிரிக்கா, ஐரோப்பா, ஆஸ்திரேலியா, அமெரிக்கா ஆகிய ஐந்து கண்டங்களைக் குறிக்கின்றன. இந்தக்கொடி 1920-ம் ஆண்டு தான் முதல் முதலாக பறக்கவிடப்பட்டது.

ஒலிம்பிக் வரலாறு: பழங்காலத்தில் ஒலிம்பிக் போட்டியை ஒரு விளையாட்டு திருவிழாவாக கருதி கொண்டாடியுள்ளனர் கிரீஸ் நாட்டு மக்கள். அங்கு அமைந்துள்ள ஒலிம்பியாவில் நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்த போட்டி ஆரம்ப காலங்களில் நடத்தப்பட்டுள்ளன. பெரும்பாலும் தடகள விளையாட்டுகளை முன்வைத்து ஆதிகால ஒலிம்பிக் நடத்தப்பட்டுள்ளது. அதோடு மல்யுத்தம் மாதிரியான விளையாட்டுகளும் நடைபெற்று உள்ளது. இந்த போட்டியில் பங்கேற்கும் வீரர்கள் விளையாட்டை வழிபட்டனர். இப்படியாக தூவப்பட்ட விதை இன்று விருட்சமாக ‘மாடர்ன் டே’ ஒலிம்பிக் விளையாட்டாக கொண்டாடப்பட்டு வருகிறது. அண்மைய காலமாக சுமார் 400க்கும் மேற்பட்ட நாடுகள் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்று வருகின்றன.

1912-1948 வரை ஒலிம்பிக்கில் கட்டிடக்கலை, இலக்கியம், இசை, ஓவியம் மற்றும் சிற்பம் என ஐந்து வகையான கலைப்போட்டிகளும் இடம் பெற்றிருந்தன. தற்போது அவை ஒலிம்பிக் போட்டிகளின் ஒரு அங்கமாக இல்லை. எனினும் சர்வதேச ஒலிம்பிக் சங்கம் கலாச்சார ஒலிம்பியாட் மூலம் கலையுடன் தொடர்ந்து இணைந்துள்ளது.
ஒலிம்பிக்கில் வழங்கப்படும் தங்க பதக்கங்கள் 1912 வரை மட்டுமே முழுமையாக தங்கத்தில் செய்து வழங்கப்பட்டன. அதன் பின்னர் 6 கிராம் தங்கம் மற்றும் வெள்ளி கலந்து செய்யப்படும் பதக்கமே முதலிடம் பெறுபவருக்கு வழங்கப்படுகிறது. 1896 இல் முதன்முதலாக தொடங்கப்பட்ட நவீன கால ஒலிம்பிக் போட்டிகள், 1916 (முதல் உலகப்போர்), 1940 மற்றும் 1944 (இரண்டாம் உலகப்போர்) ஆகிய ஆண்டுகளில் மட்டுமே ரத்து செய்யப்பட்டன.

ஒலிம்பிக்கில் இந்தியா: இந்தியா கடந்த 1900ம் ஆண்டு முதல் ஒலிம்பிக்கில் பங்கேற்று வருகிறது. 2000க்கு பிறகு இந்தியா ஒரே ஒரு தங்கம்தான் வென்றுள்ளது. அதை வென்றவர் அபினவ் பிந்த்ரா. அதே நேரத்தில் இந்தியா ஒவ்வொரு முறையும் வெவ்வேறு விளையாட்டு பிரிவுகளில் ஒலிம்பிக்கில் பங்கேற்பதை வழக்கமாக கொண்டு வருகிறது குறிப்பிடத்தக்கது.

Readmore: உணவு பஞ்சத்தின் கோரமுகம்!. 5 மில்லியன் மக்கள் பசியால் வாடும் அபாயம்!. ஐ.நாடு., எச்சரிக்கை!

KOKILA

Next Post

ஜனநாயகன் கடைசி படம் இல்லையா ? விஜய் சொன்னது இதுதான்.. உண்மையை உடைத்த மமிதா பைஜூ..

Mon Jun 23 , 2025
விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியைத் தொடங்கி அரசியலிலும் ஈடுபட்ட விஜய் ஜனநாயகன் படம் எனது கடைசி படம் என கூறியிருந்தார். இது ரசிகர்களுக்கு அதிர்ச்சியைக் கொடுத்த நிலையில் விஜய் தனது முடிவினை மாற்றி உள்ளதாக ஜன நாயகன் படத்தில் நடித்து வரும் மமிதா பைஜூ தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக தளபதி விஜய் கடந்த 2024-ம் ஆண்டு பிப்ரவரி மாதம், தமிழக வெற்றிக் கழகம் என்ற […]
vijay mamitha baiju

You May Like