2-வது திருமணத்திற்கு ஓ.கே சொன்ன சமந்தா.. சத்குரு சொன்னதால் தான் இந்த திடீர் மாற்றமாம்..

சமந்தாவும் நாக சைதன்யாவும் கடந்த ஆண்டு அக்டோபர் 2-ம் தேதி ஒரு கூட்டறிக்கை மூலம் தங்கள் பிரிவை அறிவித்தனர். அவர்கள் தங்கள் விவாகரத்து குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டதில் இருந்து, அதைப் பற்றி பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன.. கடந்த சில வாரங்களாக, நாக சைதன்யா, சமந்தா அளித்து வரும் நேர்காணல்களில் தங்களின் பிரிவைப் பற்றி பேசி வருகின்றனர்.

naga chaitanya samantha ruth prabhu take the how well do we know each other amid the divorce rumours heres what happened next001

அந்த வகையில், காஃபி வித் கரண் 7 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சமந்தா, நாக சைதன்யாவுடன் பிரிந்த பிறகு ஒரே அறையில் தன்னை வைத்திருந்தால், கூர்மையான பொருட்களை மறைத்து வைக்க வேண்டும் என்று தெரிவித்தார். அவர் மீது தனக்கு கடினமான உணர்வுகள் இருப்பதாகவும் சமந்தா தெரிவித்தார்..

ஆனால் அதே நேரத்தில், நாக சைதன்யாவிடம் சமந்தாவை இப்போது சந்தித்தால் என்ன செய்வீர்கள் என்று கேட்கப்பட்டது. “நான் ஹாய் சொல்லி அவரை கட்டிப்பிடிப்பேன்..” என்று கூறினார்.

இந்நிலையில் 2-வது திருமணம் செய்து கொள்ள சமந்தா சம்மதித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.. சமீபத்தில் சமந்தா கொடுத்த பேட்டி ஒன்றில், தனக்கு மீண்டும் திருமணம் செய்து கொள்ளும் என்ண்ணம் இல்லை என்றே கூறியிருந்தார்.. ஆனால், சத்குரு ஜக்கி வாசுதேவ் சமாதானப்படுத்தியதை அடுத்து, சமந்தா இரண்டாவது முறையாக திருமணம் செய்து கொள்ள சம்மதித்துள்ளதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே நாக சைதன்யா நடிகை ஒருவருடன் டேட்டிங் செய்வதாகவும், விரைவில் 2-வது திருமணம் செய்து கொள்ள உள்ளதாகவும் தகவல் வெளியானது.. மேலும் நாக சைதன்யாவும் சமந்தாவும் பரஸ்பர சம்மதத்துடன் விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்ததாக கூறப்படுகிறது. அதற்கான சட்ட நடவடிக்கைகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

RUPA

Next Post

மீண்டும் அணிக்கு திரும்பும் பும்ரா..? மீண்டெழுமா இந்திய அணி..? ரசிகர்கள் எதிர்பார்ப்பு..!

Fri Sep 23 , 2022
காயம் காரணமாக கடந்த சில போட்டிகளில் இந்திய அணியில் விளையாடாமல் இருந்த நட்சத்திர பந்துவீச்சாளர் பும்ரா, முழு உடல் தகுதியடைந்து தற்போது மீண்டும் அணிக்கு திரும்ப இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பும்ரா அணியில் இடம்பெறாமல் இருந்ததால் டெத் ஓவர்களில் மற்ற பவுலர்கள் ரன்களை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகின்றனர். ஆசியக் கோப்பையிலிருந்து கடைசியாக விளையாடிய ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டிவரை பந்துவீச்சு சரியில்லாமல் போனதாலேயே இந்தியா படுதோல்விகளை சந்தித்து வருகிறது. அதனால், […]
மீண்டும் அணிக்கு திரும்பும் பும்ரா..!! மீண்டெழுமா இந்திய அணி..? ரசிகர்கள் எதிர்பார்ப்பு..!

You May Like