சென்னை புரசைவாக்கம், கங்காதரேசுவரர் கோயில் தேரோட்டம் நாளை (ஜூன் 06) நடைபெறுவதால் சுற்றுவட்டாரத்தில் உள்ள 7 பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக சென்னை ஆட்சியர் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “சென்னை மாவட்டம், புரசைவாக்கம் வட்டம், இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கங்காதரேசுவரர் திருக்கோயிலில் ஆண்டு பிரம்மோற்சவ பெருவிழாவின் ஒரு பகுதியாக வருகிற 06.06.25 / வெள்ளிக்கிழமை (அன்று) இத்திருக்கோயில் வரலாற்றில் முதல் முறையாக புதிய மற்றும் புதுப்பிக்கப்பட்ட அம்பாள் மரத்தேர் ஆகிய இரண்டு திருத்தேர்கள் பெருவிழா தேரோட்டம் நடைபெறவுள்ளது.
இத்திருத்தேரோட்டத்தை முன்னிட்டு 06.06.2025 (நாளை) இக்கோயில் அமைந்துள்ள பகுதியை சுற்றியுள்ள பள்ளிகளுக்கு மட்டும் உள்ளுர் விடுமுறை அளிக்கப்படுகிறது என சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் தெரிவித்துள்ளார். அதன்படி கங்காதரேசுவரர் மேல் நிலைப்பள்ளி, ELM School, MCTM ஆண்கள் மேல் நிலைப்பள்ளி, MCTM பெண்கள் மேல் நிலைப்பள்ளி, அழகப்பா மேல் நிலைப்பள்ளி, Evarts school,சென்னை மாநகராட்சி பள்ளி(வெள்ளா தெரு) ஆகிய 7 பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்விடுமுறைக்கு ஈடாக வரும் 21.06.2025 (சனிக்கிழமை) பள்ளிகள் இயங்கும் என தெரிவிக்கப்படுகிறது.
Read more: தட்கல் டிக்கெட் புக் பண்ண இனி ஆதார் வெரிஃபிகேஷன் கட்டாயம்..!! ஏஜெண்டுகளுக்கு ஆப்பு வைத்த ரயில்வே..!!