கடந்த 2016 இல் டிசம்பர் மாதத்தில் சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஜெயலலிதா மரணம் அடைந்தார். அவரது மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் இருப்பதாக நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை குழு ஒன்று அமைக்கப்பட்டது.
இன்று அந்த விசாரணை குழு 608 பக்கம் கொண்ட விசாரணை அறிக்கையை சட்டப்பேரவையில் தாக்கல் செய்துள்ளது. அதில், கே.எஸ் சிவக்குமார், சசிகலா, முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் முக்கிய குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் நான்கு பேரும் ஜெயலலிதா மரணம் குறித்த குற்றம் செய்தவர்களாக முடிவு செய்து ஆறுமுகசாமி ஆணையம் பரிந்துரைத்துள்ளது. மேலும், சசிகலா மற்றும் ஜெயலலிதாவிற்கு இடையில் 2012 முதல் சமூகமான உறவு இல்லை என்றும், ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின் பல விஷயங்களை சசிகலா தான் ரகசியமாக கண்காணித்து வந்தார் என்றும், அவரது சிகிச்சைகள் குறித்த அனைத்து விஷயங்களையும் சசிகலா ரகசியமாகிவிட்டார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஜெயலலிதாவை மருத்துவ குழு வெளிநாட்டிற்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளிக்க தயாராக இருந்த போதும், அதை சசிகலா முன்னெடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. எய்ம்ஸ் மருத்துவ குழு ஐந்து முறை அப்பல்லோவிற்கு வந்த போதும் கூட முறையான சிகிச்சை நடைபெறவில்லை. இவை அனைத்தையும் தடுத்தது சசிகலா தான்.” என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது.