வாட்ஸ்அப் மூலம் பென்ஷன் அப்டேட்…! ஒரு மெசேஜ் அனுப்பினால் போதும்…! எஸ்பிஐ புதிய வசதி அறிமுகம்

எஸ்பிஐ வங்கி மூத்த குடிமக்கள் தங்கள் ஓய்வூதியம் தொடர்பான விவரங்களை வாட்ஸ்அப்பில் பெற அனுமதிக்கும் வசதியை அறிமுகம் செய்துள்ளது.

ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா தனது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு புதிய புதிய அம்சங்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில் தற்பொழுது அனைவரையும் மகிழ்விக்கும் விதமாக ஒரு செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது. மூத்த குடிமக்கள் தங்கள் ஓய்வூதியம் தொடர்பான விவரங்களை வாட்ஸ்அப்பில் பெற அனுமதிக்கும் வசதியை முதன்முறையாக அறிமுகப்படுத்தியுள்ளது.


இது குறித்து வங்கியின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில்; வாட்ஸ்அப் மூலம் உங்கள் ஓய்வூதியம் தொடர்பான விவரங்களை இனி நீங்கள் பெற முடியும். உங்கள் வசதிக்கேற்ப இந்த சேவையைப் பெறலாம். சேவையைப் பெற வாட்ஸ்அப் மூலம் 9022690226 இல் “ஹாய்” என்று அனுப்பவும். அப்படி அனுப்பினால் உங்களுக்கான தகவல்கள் அனுப்பப்படும் என்று வங்கியின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

ஷாக்...! மீண்டும் பால் விலை லிட்டருக்கு 2 ரூபாய் உயர்த்திய நிறுவனம்..! இன்று முதல் அமல்...!

Mon Nov 21 , 2022
மதர் டெய்ரி நிறுவனம் பாலின் விலையை லிட்டருக்கு இரண்டு ரூபாய் உயர்த்தி உள்ளது. முன்னணி பால் சப்ளையரான மதர் டெய்ரி, ஃபுல் க்ரீம் பாலின் விலையை லிட்டருக்கு 1 ரூபாயும், டோக்கன் பாலின் விலையை லிட்டருக்கு 2 ரூபாயும் உயர்த்தியுள்ளது. புதிய விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. உள்ளீட்டுச் செலவுகள் அதிகரித்ததன் காரணமாக நிறுவனம் கட்டணத்தை உயர்த்தியுள்ளது. முழு கிரீம் பால் விலையில் மாற்றம் […]
images 2022 11 21T060846.151

You May Like