சேமிப்பு கணக்குகள் தொடர்பாக எஸ்பிஐ (SBI) வங்கி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
நாட்டில் மிகப்பெரிய வங்கியாக எஸ்பிஐ வங்கி உள்ளது. இந்த வங்கிக்கு சுமார் 47 கோடிக்கும் அதிகமான வாடிக்கையாளர்கள் உள்ளனர். கடந்த 2020ஆம் ஆண்டு அடிப்படை சேமிப்பு கணக்குகள், 18 வயதுக்குட்பட்ட மைனர்களுக்கான கணக்குகள், ஓய்வூதியதாரர்கள் கணக்குகள், சமூக நலத்திட்டங்களின் பணிகள் உள்ளிட்ட பல்வேறு கணக்குகளுக்கான கட்டணத்தை ரத்து செய்தது. அதேபோல் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அனைத்து சேமிப்பு தாரர்களுக்கும் மினிமம் பேலன்ஸ் அவதாரத்தை நீக்கிவிட்டது.

தற்போது நகரப்புறங்களில் எஸ்பிஐ கணக்குகளுக்கான மினிமம் பேலன்ஸ் 3,000 ரூபாயாகவும், நகர்புறங்களில் மினிமம் பேலன்ஸ் 2,000 ரூபாயாகவும், கிராமப்புறங்களில் மினிமம் பேலன்ஸ் ரூ.1,000 ஆகவும் உள்ளது. இந்நிலையில், சேமிப்பு கணக்கு ரூ.10 கோடிக்கு கீழே இருந்தால் 2.7 சதவீதம் வட்டியும், அதற்கு மேல் இருந்தால் 3 சதவீதம் வட்டியும் வழங்கப்படுகிறது. எனவே, வாடிக்கையாளர்கள் வங்கிக்கு நேரடியாக சென்றோ அல்லது தங்களது செல்போனில் yono என்ற செயலியை பதிவிறக்கம் செய்தோ கணக்குகளை தொடங்கிக் கொள்ளலாம்.