இந்தியாவில் டிஜிட்டல் பண பரிவர்த்தனைகள் மிக வேகமாக அதிகரித்து வருகிறது.. இதனால் அன்றாட பணிகள் கூட ஆன்லைனில் முடிக்கப்படுகிறது.. டிஜிட்டல் மயமாக்கலில், குறிப்பாக வங்கித் துறையில் இந்தியா உலக அளவில் முன்னணியில் உள்ளது. வாடிக்கையாளர்கள் சிறிய பணிகளுக்காக செய்ய வங்கிக்கு வெளியே வரிசையில் நிற்க வேண்டிய நாட்கள் போய்விட்டன. எனினும் டிஜிட்டல் முறையில் பல்வேறு நூதுன மோசடிகளும் அதிகரித்து வருகின்றன.. பல வங்கி வாடிக்கையாளர்கள் ஹேக்கர்களின் மோசடிகளுக்கு எளிதில் இரையாகின்றனர்.

ஹேக்கர்கள் போலி மின்னஞ்சல் ஐடிகளைப் பயன்படுத்தி பிற நபர்களின் தனிப்பட்ட தகவல்களைப் பெறுவதுடன், அவற்றை தவறாகப் பயன்படுத்துகின்றனர்.. இதன் காரணமாக நாட்டின் முக்கியமான வங்கிகள் வாடிக்கையாளர் எச்சரிக்கையாக இருக்கும்படி தொடர்ந்து அறிவுறுத்தி வருகின்றன.. அந்த வகையில் எஸ்பிஐ வங்கி, சைபர் மோசடி குறித்து தனது வாடிக்கையாளர்களை எச்சரித்துள்ளது. எஸ்பிஐயின் யோனோ வங்கிக்கணக்கு பிளாக் செய்யப்பட்டுள்ளது என்று செய்தி வருகிறது.. உங்கள் நெட் பேங்கிங்கில் உள்நுழைய, உங்கள் PAN எண்ணைப் புதுப்பிக்கவும் என்றும் அதில் குறிப்பிட்டுள்ளது…
அந்த செய்தி போலியானது என்று இந்திய பத்திரிகை பணியகமான PIB தெரிவித்துள்ளது.. மேலும் உங்கள் வங்கி விவரங்களைப் பகிருமாறு கேட்கும் மின்னஞ்சல்கள்/எஸ்எம்எஸ்களுக்கு ஒருபோதும் பதிலளிக்க வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளது.. இதே போன்ற செய்தி ஏதேனும் உங்களுக்கு வந்திருந்தால், உடனடியாக report.phishing@sbi.co.in என்ற இணையதளத்தில் புகாரளிக்கவும். இந்தச் செய்திகளுக்குப் பதிலளிக்க வேண்டாம் என்றும், உடனடியாகப் புகாரளிக்க வேண்டாம் என்றும் PIB வாடிக்கையாளர்களை எச்சரித்தது.