சேலம் மாவட்டத்தில் உள்ள சிறுபான்மையின மாணவ, மாணவியர்கள் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; தமிழ்நாட்டில் அரசு, அரசு உதவி பெறும் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட தனியார் கல்விநிலையங்களில் 1 முதல் 10-ஆம் வகுப்பு வரை பயிலும் சிறுபான்மையின மாணவ,மாணவியர்களுக்கு பள்ளி படிப்பு கல்வி உதவித்தொகையும், 11-ஆம் வகுப்பு முதல் ஆராய்ச்சி படிப்பு வரை பயில்பவர்களுக்கு பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித்தொகையும் மற்றும் தொழிற்கல்வி மற்றும் தொழில்நுட்பக் கல்வி பயில்பவர்களுக்கு தகுதி மற்றும் வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித்தொகையும் (புதியது மற்றும் புதுப்பித்தல்) 9-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலும் சிறுபான்மையினர் மாணவியர்களுக்கு மட்டும் பேகம் ஹஜ்ரத் மகால் கல்வி உதவித்தொகையும் ஒன்றிய அரசின் தேசிய கல்வி உதவித்தொகை https://scholarships.gov.in/ என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது.

பள்ளி படிப்பு, பேகம் ஹஜ்ரத் மகால் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்க 15.11.2022 மற்றும் பள்ளி மேற்படிப்பு, தகுதி (ம) வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்க 30.11.2022 இறுதி நாளாகும். எனவே, தகுதி வாய்ந்த சிறுபான்மையின மாணவ / மாணவியர்கள் மேற்படி காலக்கெடுவிற்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலக அறை எண் 10 இல் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை நேரிலோ அல்லது 04272451333 என்றதொலைபேசி எண் மூலமாகவோ தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.