இன்று 10 மாவட்டங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை.
வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி தென்மேற்கு வங்கக்கடலில் இலங்கை கடலோரப்பகுதிகளை ஒட்டி நிலவுகிறது. இது அடுத்த 24 மணி நேரத்தில் சற்று வலுப்பெற்று தமிழகம், புதுச்சேரி கடற்கரையை நோக்கி 12-ம் தேதிகளில் நகரும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
இதன் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு, நாகை, தஞ்சாவூர், மயிலாடுதுறை, வேலூர், திருவாரூர் ஆகிய 10 மாவட்டங்களுக்கு கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதனால், மாவட்டத்தில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவித்து அம்மாவட்டத்தின் ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.