Red Alert: இன்று 10 மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகள் விடுமுறை…! மாவட்ட ஆட்சியர்கள் அறிவிப்பு…!

இன்று 10 மாவட்டங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை.

வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி தென்மேற்கு வங்கக்கடலில் இலங்கை கடலோரப்பகுதிகளை ஒட்டி நிலவுகிறது. இது அடுத்த 24 மணி நேரத்தில் சற்று வலுப்பெற்று தமிழகம், புதுச்சேரி கடற்கரையை நோக்கி 12-ம் தேதிகளில் நகரும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.


இதன் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு, நாகை, தஞ்சாவூர், மயிலாடுதுறை, வேலூர், திருவாரூர் ஆகிய 10 மாவட்டங்களுக்கு கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதனால், மாவட்டத்தில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவித்து அம்மாவட்டத்தின் ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

Vignesh

Next Post

#Tngovt: மாதம்‌ ரூ.1,000 உதவித்தொகை பெற இன்றே கடைசி நாள்….! ஆன்லைன் மூலம் விண்ணப்பிப்பது எப்படி...? முழு விவரம்…

Fri Nov 11 , 2022
முதலமைச்சர்‌ ஸ்டாலின் அவர்களால்‌ அரசு பள்ளிகளில்‌ 6 முதல்‌ 12-ம்‌ வகுப்பு வரை படித்து, மேல்‌ படிப்பு அல்லது தொழில்நுட்ப படிப்பு பயிலும்‌ மாணவிகளுக்கு மாதம்‌ தோறும்‌ 1,000 ரூபாய்‌ வழங்கும்‌ புதுமை பெண்‌ திட்டம்‌ துவங்கப்பட்டது. மாணவிகள் https://www.pudhumaipenn.tn.gov.in என்ற வலைத்தளம் மூலம் முதலாம்‌ ஆண்டு பயிலும்‌ மாணவிகளும்‌ விண்ணப்பிக்கலாம்‌. இணையத்தில், மாணவிகள்‌, அனைவரும்‌ சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்கள்‌ வாயிலாக நாளை மாலை வரை பதிவு செய்யலாம்‌. அரசு […]
செப்.5 முதல் மாணவிகளுக்கு ரூ.1000..? சிறப்பு விருந்தினர் இவர்தான்..! வெளியான முக்கிய தகவல்

You May Like