தமிழகத்தில் வரும் சனிக்கிழமை(நவம்பர் 19) பள்ளி, கல்லூரிகள் இயங்கும் – அரசு அறிவிப்பு..

தீபாவளிப் பண்டிகையான அக்டோபர் 24ம் தேதி அரசு விடுமுறை. அதற்கு முந்தைய நாட்கள் சனி, ஞாயி எனவே பண்டிகைக்கு அடுத்த நாள் மக்களின் வசதியை கருத்தில் கொண்டு ஒரு நாள் கூடுதலாக விடுமுறை அளிக்க கோரிக்கை விடுக்கப்பட்டது. மேலும் பள்ளி கல்லூரி மாணவர்கள் வசதிக்காகவும் விடுமுறை வழங்க கோரிக்கை விடப்பட்டது. எனவே கோரிக்கையை ஏற்றுக்கொண்ட அரசு அக்டோபர் 25ம் தேதி விடுமுறை அளித்தது. இந்த விடுமுறையை ஈடுகட்ட வரும் சனிக்கிழமை 19.11.2022 பள்ளி, கல்லூரிகள் உள்பட அனைத்து கல்வி நிறுவனங்களும் செயல்படும் என்று அரசு அறிவித்துள்ளது.


அதன்படி தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், நவம்பர் 19ஆம் தேதியன்று தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளும் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தீபாவளி மறுநாள் விடப்பட்ட விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் வரும் சனிக்கிழமை நவம்பர் 19ஆம் தேதி பணிநாளாக அறிவித்து உத்தரவிட்டுள்ளது.

Newsnation_Admin

Next Post

சோகம்...! பிரபல நடிகை உடல் நலக்குறைவு காரணமாக காலமானார்...! திரையுலகினர் இரங்கல்...

Fri Nov 18 , 2022
பிரபல நடிகை தல்ஜீத் கவுர் கங்குரா உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். மூத்த பஞ்சாபி திரைப்பட நடிகை தல்ஜீத் கவுர் கங்குரா பஞ்சாபின் ராய்கோட்டில் தனது 69 வயதில் காலமானார். 1970கள் மற்றும் 1980களில் பஞ்சாபி திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவராக தல்ஜீத் இருந்தார். அவர் தாஜ், கித்தா, புட் ஜட்டன் தே, ரூப் ஷாகினன் தா, இஷாக் நிமானா, லாஜோ, பட்வாரா, வைரீ ஜாட், படோலா, கீ […]
images 2022 11 18T054645.717

You May Like