பஞ்சாப் மாநிலத்தில் அடர்ந்த பனிமூட்டம் காரனாமாக காலை 10 மணிக்கு பள்ளிகள் தொடங்கப்பட்டு வழக்கம்போல் மாலை மூடப்படும், இது ஜனவரி 21 வரை நீட்டிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லி உத்தரபிரதேசத்தில் பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் சில நாட்களாக கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. இந்த பனி பொழிவாள பெரிது பாதிக்கப்படுவது வாகன ஓட்டிகள் தான். இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. பனித்திரை வாகன ஓட்டிகளின் பார்வையை மறைப்பதால் வாகனங்கள் மெதுவாக இயக்கப்படும் நிலையில் சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
டெல்லி, இமாச்சல், உத்திரபிரதேசம், பஞ்சாப், ஹரியானா, சண்டிகரில் அடுத்த மூன்று நாட்களுக்கு கடுமையான பனிமூட்டம் இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் அடர்ந்த பனிமூட்டம் காரணமாக பஞ்சாபில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகள், ஜனவரி-21 வரை காலை 10 மணிக்கு திறக்கப்பட்டு, வழக்கமான நேரத்தில் மூடப்படும் என்று அம்மாநில முதல்வர் பகவந்த் மான் அறிவித்துள்ளார்.
நேற்றைய தினம் மாநிலத்தின் பல பகுதிகளில் அடர்த்தியான மூடுபனியால் பார்வைத் திறன் பாதிக்கப்பட்டதை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் அடுத்த சில நாட்களுக்கு குளிர்ச்சியான சூழல் நிலவும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.