ஜனவரி-21 வரை, காலை 10 மணிக்கு தான் பள்ளிகள் திறக்கப்படும்..! அரசு அதிரடி

பஞ்சாப் மாநிலத்தில் அடர்ந்த பனிமூட்டம் காரனாமாக காலை 10 மணிக்கு பள்ளிகள் தொடங்கப்பட்டு வழக்கம்போல் மாலை மூடப்படும், இது ஜனவரி 21 வரை நீட்டிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லி உத்தரபிரதேசத்தில் பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் சில நாட்களாக கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. இந்த பனி பொழிவாள பெரிது பாதிக்கப்படுவது வாகன ஓட்டிகள் தான். இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. பனித்திரை வாகன ஓட்டிகளின் பார்வையை மறைப்பதால் வாகனங்கள் மெதுவாக இயக்கப்படும் நிலையில் சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.


டெல்லி, இமாச்சல், உத்திரபிரதேசம், பஞ்சாப், ஹரியானா, சண்டிகரில் அடுத்த மூன்று நாட்களுக்கு கடுமையான பனிமூட்டம் இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் அடர்ந்த பனிமூட்டம் காரணமாக பஞ்சாபில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகள், ஜனவரி-21 வரை காலை 10 மணிக்கு திறக்கப்பட்டு, வழக்கமான நேரத்தில் மூடப்படும் என்று அம்மாநில முதல்வர் பகவந்த் மான் அறிவித்துள்ளார்.

நேற்றைய தினம் மாநிலத்தின் பல பகுதிகளில் அடர்த்தியான மூடுபனியால் பார்வைத் திறன் பாதிக்கப்பட்டதை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் அடுத்த சில நாட்களுக்கு குளிர்ச்சியான சூழல் நிலவும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Newsnation_Admin

Next Post

திருநங்கையுடன் டேட்டிங் சென்ற எம்பாப்பே... மேலும் பலருடன் காதல் உறவு - வைரலாகி வரும் தகவல்கள்!.

Wed Dec 21 , 2022
ஒரு பக்கம் அர்ஜென்டினா வெற்றியை கொண்டாடும் ரசிகர்கள், இன்னொரு பக்கம் கிலியன் எம்பாப்பேயின் திறமையை எண்ணி வியக்கிறார்கள். இந்த நிலையில்தான் தற்போது திடீரென எம்பாப்பேவின் காதல் உறவு குறித்த விவாதங்கள் இணையத்தில் டிரெண்டாகி வருகின்றன. உலகக் கோப்பை வரலாற்றில் இறுதிப் போட்டியில் அதிக கோல்களை அடித்தவர் என்ற சாதனையைப் படைத்திருக்கும் எம்பாப்பே. உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் ஹாட்ரிக் கோல்களை அடித்த இரண்டாவது வீரர் ஆவார். 23 வயதே ஆன […]
Kylian Mbappe feature Image scaled 1

You May Like