கொளுத்தும் வெயில்.. பள்ளி மாணவர்களுக்கு முன்கூட்டியே கோடை விடுமுறை.. மாநில அரசு முடிவு..

கடும் வெப்பம் காரணமாக மேற்கு வங்கத்தில் அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் முன் கூட்டியே கோடை விடுமுறை அளிக்க அம்மாநில அரசு திட்டமிட்டுள்ளது..

நாடு முழுவதும் கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது.. கடும் வெப்பத்தின் தாக்கத்தை சமாளிக்க முடியாமல் பொதுமக்கள் தவித்து வருகின்றனர்.. இந்நிலையில் கடும் வெப்பம் காரணமாக, மேற்குவங்கத்தில் உள்ள அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் முன்கூட்டியே கோடை விடுமுறை அளிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.. இருப்பினும், இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியிடப்படவில்லை. விரைவில் இதற்கான அறிவிப்பு வெளியாகும் என்று அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.. இதுகுறித்து பேசிய அவர் “கடுமையான வெப்பம் காரணமாக, கோடை விடுமுறையை மாற்றியமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மே 24 முதல் கோடை விடுமுறை அளிக்க திட்டமிடப்பட்ட நிலையில், தற்போது மே 2 முதல் விடுமுறை அளிக்கப்பட உள்ளது.. முதல்வர் மம்தா பானர்ஜியின் வலியுறுத்தலின் பேரில் இந்த முடிவு எடுக்கப்பட்டது,” என்று தெரிவித்தார்.


இதனிடையே இந்த வார இறுதியில் மேற்கு வங்கத்தில் வெப்ப அலை நிலை நீடிக்கும் என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.. பங்குரா, புருலியா, பஸ்சிம் மெதினிபூர், பஸ்சிம் பர்தமான் மற்றும் பிர்பூம் ஆகிய மாவட்டங்களில் வறண்ட வானிலை நிலவும் என்றும், வெப்பநிலை 2-4 டிகிரி வரை அதிகரிக்கலாம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

RUPA

Next Post

’கொரோனா தொற்று இருந்தால் உடனே வெளியேற்றுங்கள்’..!! எய்ம்ஸ் மருத்துவமனை அதிரடி உத்தரவு..!!

Thu Apr 13 , 2023
நாட்டில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாநிலங்களில் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால், அனைத்து மாநில அரசுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில், டெல்லியில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவதால், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் உள்ள அனைத்து மருத்துவ ஊழியர்களுக்கும் முகக்கவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும், கொரோனா அறிகுறிகள் ஏதேனும் ஏற்பட்டால் உடனே தெரிவிக்க வேண்டுமெனவும் பணியாளர்களுக்கு டெல்லி எய்ம்ஸ் […]
’கொரோனா தொற்று இருந்தால் உடனே வெளியேற்றுங்கள்’..!! எய்ம்ஸ் மருத்துவமனை அதிரடி உத்தரவு..!!

You May Like