கடும் வெப்பம் காரணமாக மேற்கு வங்கத்தில் அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் முன் கூட்டியே கோடை விடுமுறை அளிக்க அம்மாநில அரசு திட்டமிட்டுள்ளது..
நாடு முழுவதும் கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது.. கடும் வெப்பத்தின் தாக்கத்தை சமாளிக்க முடியாமல் பொதுமக்கள் தவித்து வருகின்றனர்.. இந்நிலையில் கடும் வெப்பம் காரணமாக, மேற்குவங்கத்தில் உள்ள அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் முன்கூட்டியே கோடை விடுமுறை அளிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.. இருப்பினும், இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியிடப்படவில்லை. விரைவில் இதற்கான அறிவிப்பு வெளியாகும் என்று அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.. இதுகுறித்து பேசிய அவர் “கடுமையான வெப்பம் காரணமாக, கோடை விடுமுறையை மாற்றியமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மே 24 முதல் கோடை விடுமுறை அளிக்க திட்டமிடப்பட்ட நிலையில், தற்போது மே 2 முதல் விடுமுறை அளிக்கப்பட உள்ளது.. முதல்வர் மம்தா பானர்ஜியின் வலியுறுத்தலின் பேரில் இந்த முடிவு எடுக்கப்பட்டது,” என்று தெரிவித்தார்.
இதனிடையே இந்த வார இறுதியில் மேற்கு வங்கத்தில் வெப்ப அலை நிலை நீடிக்கும் என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.. பங்குரா, புருலியா, பஸ்சிம் மெதினிபூர், பஸ்சிம் பர்தமான் மற்றும் பிர்பூம் ஆகிய மாவட்டங்களில் வறண்ட வானிலை நிலவும் என்றும், வெப்பநிலை 2-4 டிகிரி வரை அதிகரிக்கலாம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.