நாளை மறுநாள் கரையை கடக்கிறது பிபர்ஜாய் புயல்…..! கொந்தளிக்கும் குஜராத் கடல் பகுதி….!

குஜராத் மாநிலம் கட்ச் மாவட்டத்தில் உள்ள ஜக்காவ் துறைமுகம் அருகே பிபர்ஜாய் புயல் மணிக்கு 150 கிலோ மீட்டர் வேகத்தில் நாளை மறுநாள் கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை செய்திருக்கிறது, இதன் காரணமாக, கடலோர மாவட்டங்களான போர்பந்தர், தேவபூமி, துவாரகா, ஜாம்நகர், ஜுனாகர், மோர்பி போன்ற பகுதிகளில் வசிக்கும் மக்கள் அப்புறப்படுத்தப்பட்டு வருகிறார்கள்.


இந்த நிலையில் துவாரகாவின் பலத்த காற்று வீசியதுடன் மட்டுமல்லாமல் கடல் கொந்தளிப்புடன் காணப்படுகிறது. மும்பையில் இருக்கின்ற வொர்லி கடல் பகுதி கொந்தளிப்புடன் காணப்பட்டது.

ஜுஹு மற்றும் நவ்சாரி போன்ற கடற்கரைகளுக்கு பொதுமக்கள் செல்வதை தடுக்கும் விதத்தில், காவல் மற்றும் பாதுகாப்பு படையினர் நிறுத்தப்பட்டு இருக்கிறார்கள். இதற்கு நடுவே துவாரகா கடற்கரை அருகே கடலில் கச்சா எண்ணெய் எடுக்கும் பணியில் ஈடுபட்ட ஊழியர்கள் 50 பேரை ஹெலிகாப்டர் மூலமாக பத்திரமாக மீட்டது மாநில அரசு புயல் கரையை கடக்க இருக்கின்ற நிலையில் குஜராத் கடற்கரை பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது.

Next Post

அடுத்த அதிரடி…..! அமைச்சர் செந்தில்பாலாஜி வீட்டில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை…..!

Tue Jun 13 , 2023
சென்னை பசுமை வழி சாலையில் இருக்கின்ற அமைச்சர் செந்தில் பாலாஜியின் அரசு இல்லத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று காலை 8.30 மணி முதல் சோதனை நடத்தி வருகின்றனர். மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் துணையுடன் 10க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். வங்கி பரிவர்த்தனை குறித்து விசாரணை மேற்கொள்ள எஸ்பிஐ வங்கி அதிகாரிகளும் வரவழைக்கப்பட்டனர் அமைச்சர் செந்தில் பாலாஜி நடை பயிற்சிக்காக வெளியே சென்று இருந்த நிலையில் அமராக்கத்துறை […]
senthilbalaji enforcement

You May Like