ஒடிசா மாநிலம் பாலாசோர் பகுதியில் நடைபெற்ற ரயில் விபத்தில் பயணிகள் யாராவது சிக்கி இருக்கிறார்களா? என்று தேடும் பணி இன்று மாலைக்குள் முடிவடையலாம் என தேசிய பேரிடர் மீட்பு படை தெரிவித்துள்ளது.
மீட்பு பணிகள் முடிவடைந்து விட்டதாகவும் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருவதாகவும் ரயில்வே நிர்வாகம் கூறி இருப்பதாக தெரிவிக்கப்பட்ட நிலையில், விபத்து பகுதியில் தொடர்ந்து, மீட்பு பகுதிகள் நடைபெற்று வருவதாக தற்போது தகவல் கிடைத்துள்ளது.
விபத்து பகுதியில் சற்று நேரம் குறைய தேசிய பேரிடர் மீட்பு படை வீரர்கள் 300 பேர் உலோகங்களை அறுக்கும் இயந்திரங்கள், மோப்ப நாய்கள் மற்றும் பல்வேறு மீட்புக்கருவிகளுடன் பணிபுரிந்து வருவதாகவும் பயணிகள் யாராவது சிக்கி உள்ளார்களா? என்று தேடும் பணி இன்று மாலைக்கும் முடிவடையும் எனவும் தேசிய பேரிடர் மீட்பு படை இயக்குனர் தெரிவித்திருக்கிறார்.