அரசியலில் விஜயகாந்த், வைகோ செய்த தவறை நான் செய்ய மாட்டேன்..!! – சீமான் பேச்சு

seeman34455 1559882512

2026 சட்டசபை தேர்தலுக்கான கவுன்ட் டவுன் தொடங்கிவிட்டது. திமுக கூட்டணி, அதிமுக – பாஜக கூட்டணி, நாம் தமிழர், தவெக கட்சிகள் இடையே நான்கு முனை போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் நாதக தனித்துத்தான் போட்டியிடும். தேர்தலில் தோற்று, நாம் தமிழர் கட்சி செத்து சாம்பல் ஆனாலும் தனித்தே போட்டியிடுவோம்’’ என்று சீமான் தெரிவித்துள்ளார்.


சென்னை ஆயிரம் விளக்கில் நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று செய்தியளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர் கூறியதாவது: விஜய் வருகையால் நாதக வாக்குகள் குறையும் என தகவல்களைப் பரப்புகிறார்கள். நான் பயந்து, கூட்டணிக்குப் போய்விடுவேன் என்று எதிர்பார்க்கிறார்கள். அரசியலில் விஜயகாந்த், வைகோ செய்த தவறை நான் ஒருபோதும் செய்ய மாட்டேன்.

தேர்தலில் தோற்று, நாம் தமிழர் கட்சி செத்து சாம்பல் ஆனாலும் தனித்தே போட்டியிடுவோம்’’ என்று ஆவேசமாக சீமான் பேசினார். மேலும் கருத்துக் கணிப்புகளை சுட்டிக்காட்டி, “ஒரு தொலைக்காட்சி இன்று 5%, நாளை 4% என்று சொல்கிறது; தேர்தல் முடிந்ததும் எக்சிட் போல்களில் வேறு எண்கள் காட்டுகிறார்கள். இவை நிஜ நிலையை பிரதிபலிக்கவில்லை” என ஊடகங்களை சீமான் கடுமையாக விமர்சித்தார்.

முதல் முறையாக 2016 சட்டப்பேரவைத் தேர்தலில் களம் இறங்கிய நாம் தமிழர் கட்சி அப்போதிலிருந்து இன்றுவரை எந்த அரசியல் கூட்டணியிலும் இணையாமல், தனித்துப் போட்டியிடும் கொள்கையை தொடர்ந்து கடைப்பிடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Read more: வங்க கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு.. இந்த மாவட்டங்களில் மழை வெளுக்க போகுது..!! – வானிலை ஆய்வு மையம் அலர்ட்…

English Summary

Seeman has announced that the Naam Tamilar Party will contest the 2026 Assembly elections independently.

Next Post

“இந்த வெற்று நாடகங்களுக்குப் பதில்.. ஸ்டாலின் ராகுல்காந்தியிடம் இதை சொல்லணும்..” அண்ணாமலை பரபரப்பு பதிவு..

Mon Aug 11 , 2025
2024 மக்களவை தேர்தலில் சுமார் ஒரு லட்சம் போலி வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாகவும், பாஜகவும் தேர்தல் ஆணையமும் கூட்டு சேர்ந்து வாக்கு திருட்டில் ஈடுபட்டுள்ளதாகவும் எதிர்க்கட்சி தலைவர் மிகப்பெரிய குற்றச்சாட்டை முன்வைத்தார்.. எனினும் ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுகளை இந்திய தேர்தல் ஆணையம் திட்டவட்டமாக மறுத்துள்ளது. எனினும் எதிர்க்கட்சிகள் தேர்தல் ஆணையத்தை தொடர்ந்து கடுமையாக விமர்சித்து வருகின்றன.. இந்த நிலையில் தேர்தல் ஆணையத்தை பாஜக தனது தேர்தல் மோசடி இயந்திரமாக மாற்றிவிட்டது என […]
rahul gandhi stalin annamalai

You May Like