தமிழ் சினிமாவில் இயக்குனராக கொடிக்கட்டி பறப்பவர் செல்வராகன். இவர், ’காதல் கொண்டேன்’ படத்தில் தான் அறிமுகப்படுத்திய சோனியா அகர்வாலை காதலித்து திருமணம் செய்துகொண்டார். ஆனால், கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து செய்தனர். பிறகு, 2011ஆம் ஆண்டில் தன்னிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த கீதாஞ்சலியை 2-வதாக திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு லீலாவதி என்ற மகளும் ஓம்கார், ரிஷிகேஷ் என்ற இரு மகன்களும் உள்ளனர். செல்வராகவனின் சகோதரர் தான் நடிகர் தனுஷ்.
இன்றளவிலும் ரசிகர்கள் மத்தியில் தனுஷின் சிறந்த படம் எது என்று கேட்டால், யோசிக்காமல் அனைவரும் சொல்லும் படம் புதுப்பேட்டை தான். இன்று பல கேங்ஸ்டர் படம் வந்தாலும், எப்படிப்பட்ட ஆக்ஷன் படங்களை கொடுத்தாலும் புதுப்பேட்டை படத்தில் வரும் காட்சிகளை போல், இனி யாராலும் எடுக்க முடியாது. செல்வராகவன் முதன்முதலாக இயக்கிய படம் என்றால் ’காதல் கொண்டேன்’ தான்.
இதற்கு அடுத்தது 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன, இரண்டாம் உலகம், நெஞ்சம் மறப்பதில்லை, என்.ஜி.கே. ஆகிய படங்களை செல்வராகவன் இயக்கியுள்ளார். மேலும், இவர் எழுதி வெளியான படங்கள் என்றால் துள்ளுவதோ இளமை, யாரடி நீ மோகினி, மாலை நேரத்து மயக்கம் ஆகிய படங்கள் தான்.
செல்வராகவன் இயக்கிய படங்களிலேயே மிகவும் பிரம்மாண்டமாக எடுக்கப்பட்ட படம் என்றால், 2010ஆம் அண்டில் வெளியான ‘ஆயிரத்தில் ஒருவன்’ திரைப்படம் தான். இந்தப் படத்திற்கு உயிர் கொடுத்தது ஜிவி பிரகாஷின் இசைதான். இந்தப் படத்தில் நடிகர்கள் கார்த்திக், பார்த்திபன், நடிகைகள் ஆண்ட்ரியா, ரீமா சென் மற்றும் ஆயிரக்கணக்கான துணை நடிகர்கள் நடித்திருக்கின்றனர். ஆனால், இப்படம் வெளியான போது, கொண்டாடாத ரசிகர்கள், தற்போது இப்படத்தையும், ஜிவியின் இசையையும் கொண்டாடி வருகின்றனர். மேலும், ஆயிரத்தில் ஒருவன் படத்தின் 2ஆம் பாகம் வேண்டும் என்றும் ரசிகர்கள் தொடர்ந்து கேட்டு வருகின்றனர். ஆனால், செல்வராகவனுக்கு அதில் விருப்பம் இல்லாததுபோல் தெரிகிறது.
அடுத்ததாக, ரசிகர்களால் மறக்க முடியாத படம் என்றால், 2004ஆம் ஆண்டு வெளியான “7ஜி ரெயின்போ காலனி” தான். இப்படத்தில் முதன் முதலாக தோன்றியவர் தான் நடிகர் ரவி கிருஷ்ணா. இவருக்கு ஜோடியாக சோனியா அகர்வால் நடித்திருப்பார். வேலைக்கு செல்லாத மகன், காதலியின் ஊக்கப்படுத்தும் பேச்சு, மகன் வேலைக்கு சேர்ந்ததை நினைத்து கண்ணீர் விட்டு அழும் அப்பா என படமே ஹார்ட் டச் சீனாக இருந்தது.
இந்நிலையில் தான், 7ஜி ரெயின்போ காலனி படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி வருகிறது. இப்படத்தை ஸ்ரீ சூர்யா மூவிஸ் நிறுவனம் தயாரிக்கும் நிலையில், இப்படத்திற்கு மீண்டும் யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இப்படத்தில் அனஸ்வரா ராஜன் நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்புகள் தற்போது நடைபெற்று வருகிறது. இதற்கிடையே, இப்படத்தின் வெளியீட்டு தேதி குறித்து தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் முக்கிய தகவலை வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், ”தற்போது தெலுங்கில் நடிகர் பவன் கல்யான் நடிப்பில் ‘ஹரிஹர வீர மல்லு’ படம் வெளியாக இருக்கிறது. இப்படத்தின் எடிட்டிங் வேலைகளை முடித்து அதனை வெளியிடுவதில் தீவிரமாக இருக்கிறோம். எனவே, இப்படம் ஜூன் 12ஆம் தேதி வெளியாக உள்ளதால், வேலைகள் அதிகம் இருக்கிறது. இப்படத்திற்கு பிறகு ‘7 ஜி ரெயின்போ காலனி’ படத்திற்கான ஷூட்டிங் தொடங்கப்படும். ரசிகர்கள் கவலைப்பட வேண்டாம். இந்தாண்டுக்குள் (2025) 7ஜி ரெயின்போ காலனி படத்தின் இரண்டாம் பாகத்தை திரையில் பார்க்கலாம்” என தெரிவித்துள்ளார்.