செம குட் நியூஸ்..!! இனி சனிக்கிழமைகளிலும் ஆர்.டி.ஓ. அலுவலகங்கள் செயல்படும்..!! தமிழ்நாடு அரசு அதிரடி..!!

வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் சனிக்கிழமைகளில் செயல்பட தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்து உள்ளது.


இதுகுறித்து போக்குவரத்துத்துறை ஆணையர் சண்முக சுந்தரம் மோட்டார் வாகன அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், “சென்னை மாநகரில் உள்ள அனைத்து வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களிலும் (வட்டாரப் போக்குவரத்து அலுவலகம், மீனம்பாக்கம் மற்றும் செங்குன்றம் உட்பட) ஓட்டுநர் உரிமம் வழங்குவதற்கு சனிக்கிழமையன்று அனைவரும் பணிபுரிய வேண்டும். அதிக எண்ணிக்கையிலான ஓட்டுநர் உரிம விண்ணப்பங்கள் நிலுவையில் உள்ளதால், அந்த வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்கள் சனிக்கிழமைகளில் செயல்பட வேண்டும்.

சனிக்கிழமைகளில் செயல்படும் அலுவலகங்களின் பெயரைத் தெளிவாகக் குறிப்பிட்டு, பொதுமக்களும் வசதியைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்பதைத் தெளிவாகக் குறிப்பிட்டு, மாவட்ட ஆட்சியர்கள் மூலம் விரிவான செய்திக்குறிப்பு வெளியிட வேண்டும். இது தொடர்பாக ஏதேனும் முறைகேடுகள் மற்றும் புகார்கள் வந்தால், இந்த அறிவுறுத்தல் உடனடியாக திரும்பப் பெறப்படும். தமிழ்நாட்டில் உள்ள அனைத்து வட்டாரப் போக்குவரத்து அலுவலர்களுக்கும் இந்த சுற்றறிக்கை அனுப்பி வைக்கப்படுகிறது” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

CHELLA

Next Post

’என் பொண்ணு மேலயா கை வைக்கிற’..!! புது மாப்பிள்ளையை துடிதுடிக்க கொன்ற மாமனார்..!! கடலூரில் அதிர்ச்சி..!!

Thu Jul 13 , 2023
கடலூா் மாவட்டம் திட்டக்குடி அருகே நிதிநத்தம் கிராமத்தை சேர்ந்த ரகுபதியும் (வயது 35), பக்கத்து வீட்டில் வசிக்கும் சத்யா (32) என்பவரும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு சமித் (10), தஷ்வந்த் (5) ஆகிய 2 மகன்கள் உள்ளனர். என்ஜினியரிங் முடித்த ரகுபதி, வெளிநாட்டில் நீண்ட வருடங்களாக வேலை பார்த்து வந்தார். சத்யா தனது கிராமத்திலேயே வசித்து வந்தார். கடந்த 2 ஆண்டுகளுக்கு […]
’என் பொண்ணு மேலயா கை வைக்கிற’..!! புது மாப்பிள்ளையை துடிதுடிக்க கொன்ற மாமனார்..!! கடலூரில் அதிர்ச்சி..!!

You May Like