செம குட் நியூஸ்..!! 3 மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை..!! மாவட்ட ஆட்சியர்கள் அதிரடி அறிவிப்பு..!!

தமிழகத்தில் சமூகத்தில் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக போராடியவர்களுள் ஐயா வைகுண்டர் சாமிகளும் ஒருவர். இவரை சிவன், பிரம்மா, விஷ்ணு ஆகிய மும்மூர்த்திகள் ஒருங்கிணைந்த அவதாரமாக வணங்கும் பக்தர்கள் வணங்குகின்றனர். அன்றைய திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் இருந்த சாதி பாகுபாடுகளுக்கு எதிராக போராடியவர் என்ற புகழுக்குரியவர். அத்துடன் வைகுண்ட சுவாமிகள் சுவாமிதோப்பில் சமத்துவ கிணறு ஒன்றையும் வெட்டினார். ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதம் 20ஆம் தேதி சுவாமிதோப்பு அய்யா வைகுண்டரின் அவதார தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி, இந்தாண்டு மார்ச் 4ஆம் தேதி கொண்டாடப்பட இருக்கிறது.


அந்த வகையில், இந்த தினத்தை முன்னிட்டு அய்யா வழி பக்தர்கள் சிறப்பாக கொண்டாடும் வகையில் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய 3 மாவட்டத்திற்கு வரும் மார்ச் 4ஆம் தேதி அன்று உள்ளூர் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த உள்ளூர் விடுமுறை கல்வி நிறுவனங்கள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கும் பொருந்தும் என்று அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் தெரிவித்துள்ளனர்.

CHELLA

Next Post

வாடிக்கையாளர்களுக்கு குட் நியூஸ்..!! பிரபல வங்கியில் ஃபிக்சட் டெபாசிட் திட்டத்திற்கான வட்டி அதிரடி உயர்வு..!!

Tue Feb 21 , 2023
ரிசர்வ் வங்கி அண்மையில் ரெப்போ வட்டி விகிதத்தை 6.50 சதவீதமாக உயர்த்தி அறிவிப்பு வெளியிட்டது. இதனைத் தொடர்ந்து பல வங்கிகளும் வட்டி விகிதங்களை தொடர்ந்து உயர்த்தி வருகின்றன. அந்தவகையில், நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான பஞ்சாப் நேஷனல் வங்கி ஃபிக்சட் டெபாசிட் திட்டத்தில் வட்டி விகிதங்களை தற்போது உயர்த்தியுள்ளதாக அறிவித்துள்ளது. இந்த புதிய வட்டி விகிதங்கள் பிப்ரவரி 20ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரூ.2 கோடிக்கு […]
fixed deposit 1627642644

You May Like