இன்று காலை 10 மணி அளவில் அமைச்சர் செந்தில் பாலாஜி மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட உள்ளார்.
போக்குவரத்து துறையில் வேலைவாங்கித் தருவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்ட வழக்கில் அமைச்சர் செந்தில்பாலாஜியின் சென்னை வீடு உள்பட இடங்களில் நேற்று காலை முதல் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில் 20 மணி நேர விசாரணைக்குப் பிறகு இன்று நள்ளிரவு அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறை அதிகாரிகள் திடீரென கைது செய்தனர்.
திடீரென நெஞ்சு வலி காரணமாக, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அமைச்சர் செந்தில் பாலாஜியை காண சேகர் பாபு மாசுபிரமணியம் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட அமைச்சர்கள் மருத்துவமனைக்கு வருகை தந்துள்ளனர். இன்று காலை 10 மணி அளவில் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜியை ஆச்சாரப்படுத்தி விசாரணைக்காக கைது செய்யப்படலாம் என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.