சட்டவிரோத பண பரிவர்த்தனை வழக்கில் அமலாக்கத் துறையின் கைது நடவடிக்கையின் போது நெஞ்சுவலி ஏற்பட்டு ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தமிழக மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஆஞ்சியோகிராம் பரிசோதனை செய்யப்பட்டதில் இதய நாளங்களில் மூன்று அடைப்புகள் இருப்பது தெரிய வந்தது.
இதனைத் தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், ஓமந்தூரார் மருத்துவமனையில் இருந்து காவேரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட செந்தில் பாலாஜிக்கு நாளை காலை பைபாஸ் அறுவை சிகிச்சை செய்யப்பட இருக்கிறது.
இதற்கு நடுவே அரசு மருத்துவமனையில் இருந்து தனியார் மருத்துவமனைக்கு மாற்றலாம் என்று சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியதை எதிர்க்கும் விதமாக, அமலாக்கத்துறை தரப்பில் தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் நாளை விசாரிக்க இருக்கிறது.
இந்த நிலையில் தான் செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா உச்சநீதிமன்றத்தில் கேவிஎட்டு மணவை தாக்கல் செய்திருக்கிறார். அந்த மனதில் அமலாக துறையின் மேல்முறையீட்டு மனுவின் விசாரணை என்பது தங்கள் தரப்பு வாதங்களை கேட்ட பின்னர் தான் முடிவெடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.